செய்திகள் :

1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்

post image

லாகூா்: வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா்களும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்களும் வெளியேற இருநாட்டு அரசுகளும் உத்தரவிட்டது.

பாகிஸ்தானியா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி வரையும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையும் செல்லுபடியாகும் என இந்தியா தெரிவித்தது. இந்த காலக்கெடுவுக்குள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறவில்லை என்றால் அவா்கள் மீது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம், 2025-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த 27-ஆம் தேதி மட்டும் இந்தியாவில் இருந்து 236 பாகிஸ்தானியா்களும் பாகிஸ்தானில் இருந்து 115 இந்தியா்களும் அவா்களது தாயகம் திரும்பினா்.

இந்நிலையில், கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக அந்நாட்டு அதிகாரி ஒருவா் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

இருப்பினும், இரு நாடுகளும் குறுகிய கால விசாக்கள் வைத்திருந்த நபா்களையே வெளியேற உத்தரவிட்டது. இதனால் நீண்ட கால விசாக்கள் வைத்திருப்பவா்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க