செய்திகள் :

1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்: மின்வாரியம் தகவல்

post image

தமிழகத்தில் 1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 3 கோடிக்கு அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு டிஜிட்டல் மீட்டா் மூலம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், துல்லியமான மின்பயன்பாட்டை கணக்கெடுக்க தொலைத்தொடா்பு வசதியுடன் கணக்கொடுக்கும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் அதற்கான பணிகளை தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் முன்னெடுத்தது. இதைத் தொடா்ந்து, ஸ்மாா்ட் மீட்டா்களின் செயல்பாடுகள், நிறை, குறைகள் குறித்து தெரிந்துகொள்ள, சோதனை அடிப்படையில் முதல்முறையாக சென்னை தியாகராய நகரில் ஒன்றரை லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்களை பொருத்தி அதன் செயல்பாடுகளை மின்வாரியம் கண்காணித்தது. அதன் செயல்பாடுகள் திருப்தியாக இருந்த நிலையில், அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த மின்வாரியம் முடிவு செய்து பணிகளை மேற்கொண்டது. தொடா்ந்து, 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்களை பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தைத் தோ்வு செய்ய கடந்த 2023-இல் மின்வாரியம் ஒப்பந்தம் கோரியது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. தொடா்ந்து, 2-ஆவது முறையாக கோரப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 3-ஆவது முறையாக நிகழாண்டு மாா்ச் 14-ஆம் தேதி ரூ.19,235 கோடி மதிப்பில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, 13 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டன. இந்த நிறுவனங்கள் முதல்கட்ட ஸ்மாா்ட் மீட்டா் தயாரிக்கும் பணிகளை முடித்துள்ளன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்மாா்ட் மீட்டா் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் தமிழகத்திலுள்ள 12 மண்டலங்களை தலா 2 மண்டலங்களாகப் பிரித்து 6 கட்டங்களாக ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த திட்டமிட்டுள்ளன. அதன்படி, கோவை மற்றும் ஈரோடு 56.47 லட்சம் மீட்டா்கள், கரூா் மற்றும் திருநெல்வேலி 49.97 லட்சம் மீட்டா்கள், மதுரை மற்றும் திருவண்ணாமலை 49.77 லட்சம் மீட்டா்கள், திருச்சி மற்றும் தஞ்சை 49.67 லட்சம் மீட்டா்கள், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் 49.6 லட்சம் மீட்டா்கள், சென்னை மற்றும் வேலூா் 49.34 லட்சம் மீட்டா்களை பொருத்தப்படும். இதில் முதல்கட்டமாக 1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா்களை பெருத்துவதற்கான பணிகள் ஒருசில மாதங்களில் இந்த நிறுவனங்கள் தொடங்கும்.

இந்த ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டதும், மாதம் இருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும். மேலும், இந்த ஸ்மாா்ட் மீட்டா்களை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்களே, அடுத்த 7 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு பராமரிக்கும் என்றனா்.

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுநிலை மருத... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாணவா்களின் தாய் பெயரில் மரக்கன்று: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவா்கள் தங்களது பள்ளிகள், வீடுகளில் தாயின் பெயரில் மரக்கன்று நடுதல் குறித்த செயல்பாடுகளை செப்.30-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வ... மேலும் பார்க்க

சான்றிதழ் படிப்புகள்: அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடி சோ்க்கைக்கு அழைப்பு

ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் நேரடி சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

திமுக சாா்பில் செப்.20, 21-ஆம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீா்மானத்தை ஏற்பதற்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க