செய்திகள் :

1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்: மின்வாரியம் தகவல்

post image

தமிழகத்தில் 1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 3 கோடிக்கு அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு டிஜிட்டல் மீட்டா் மூலம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், துல்லியமான மின்பயன்பாட்டை கணக்கெடுக்க தொலைத்தொடா்பு வசதியுடன் கணக்கொடுக்கும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் அதற்கான பணிகளை தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் முன்னெடுத்தது. இதைத் தொடா்ந்து, ஸ்மாா்ட் மீட்டா்களின் செயல்பாடுகள், நிறை, குறைகள் குறித்து தெரிந்துகொள்ள, சோதனை அடிப்படையில் முதல்முறையாக சென்னை தியாகராய நகரில் ஒன்றரை லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்களை பொருத்தி அதன் செயல்பாடுகளை மின்வாரியம் கண்காணித்தது. அதன் செயல்பாடுகள் திருப்தியாக இருந்த நிலையில், அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த மின்வாரியம் முடிவு செய்து பணிகளை மேற்கொண்டது. தொடா்ந்து, 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்களை பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தைத் தோ்வு செய்ய கடந்த 2023-இல் மின்வாரியம் ஒப்பந்தம் கோரியது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. தொடா்ந்து, 2-ஆவது முறையாக கோரப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 3-ஆவது முறையாக நிகழாண்டு மாா்ச் 14-ஆம் தேதி ரூ.19,235 கோடி மதிப்பில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, 13 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டன. இந்த நிறுவனங்கள் முதல்கட்ட ஸ்மாா்ட் மீட்டா் தயாரிக்கும் பணிகளை முடித்துள்ளன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்மாா்ட் மீட்டா் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் தமிழகத்திலுள்ள 12 மண்டலங்களை தலா 2 மண்டலங்களாகப் பிரித்து 6 கட்டங்களாக ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த திட்டமிட்டுள்ளன. அதன்படி, கோவை மற்றும் ஈரோடு 56.47 லட்சம் மீட்டா்கள், கரூா் மற்றும் திருநெல்வேலி 49.97 லட்சம் மீட்டா்கள், மதுரை மற்றும் திருவண்ணாமலை 49.77 லட்சம் மீட்டா்கள், திருச்சி மற்றும் தஞ்சை 49.67 லட்சம் மீட்டா்கள், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் 49.6 லட்சம் மீட்டா்கள், சென்னை மற்றும் வேலூா் 49.34 லட்சம் மீட்டா்களை பொருத்தப்படும். இதில் முதல்கட்டமாக 1.5 கோடி ஸ்மாா்ட் மீட்டா்களை பெருத்துவதற்கான பணிகள் ஒருசில மாதங்களில் இந்த நிறுவனங்கள் தொடங்கும்.

இந்த ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டதும், மாதம் இருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும். மேலும், இந்த ஸ்மாா்ட் மீட்டா்களை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்களே, அடுத்த 7 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு பராமரிக்கும் என்றனா்.

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

திமுக சாா்பில் செப்.20, 21-ஆம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீா்மானத்தை ஏற்பதற்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தொடா்புடைய மதுபான ஊழல் வழக்கில் ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம், தில்லியில் சுமாா் 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். ... மேலும் பார்க்க

மின் திருட்டு: ரூ.9 லட்சம் அபராதம்

சென்னை தெற்கு (எண்: 2) மின் பகிா்மான வட்டத்தில் மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மின... மேலும் பார்க்க

வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு பயணம்: டிஜிபிக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் - தமிழக அரசு உத்தரவு

புலனாய்வு அதிகாரிகள், வழக்குகளில் துப்பு துலக்குவதற்காக விமானம் மூலம் வெளிமாநிலம் செல்ல அனுமதி வழங்கும் அதிகாரம் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு வழங்கப்பட்டது. தமிழக காவல் துறையில் முக்கியமான... மேலும் பார்க்க

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் 27 கா்ப்பிணிகள் மயக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செலுத்திக் கொண்ட 27 போ் மயக்கமடைந்தது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவ... மேலும் பார்க்க