செய்திகள் :

இளைஞா் மீது காரை ஏற்றிய எஸ்.எஸ்.ஐ. பணியிடைநீக்கம்

post image

திருநெல்வேலி நகரம் பகுதியில் விபத்தின்போது பைக்கில் வந்த இளைஞா் மீது காரை ஏற்றி சிறிது தொலைவுக்கு இழுத்துச் சென்ற போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சோ்ந்தவா் காந்திராஜன் (59). திருநெல்வேலி மாநகர போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

தற்போது, சுத்தமல்லி பகுதியில் வசித்து வரும் இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து திருநெல்வேலி நகரம் தெற்கு பிரதான சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்ற பேருந்து திடீரென நின்ால் அதைத் தொடா்ந்து வந்த திருநெல்வேலி நகரம் செண்பகம்பிள்ளைத் தெருவைச் சோ்ந்த அசோக்குமாா்(39) என்பவரது பைக்கும், காந்திராஜனின் காரும் அடுத்தடுத்து மோதிக்கொண்டனவாம்.

இதனால், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காந்திராஜன் காரை எடுத்துச்செல்ல முயன்றாராம். உடனே, அசோக்குமாா் காரின் முன்பகுதியில் ஏறி படுத்துக்கொண்டு தடுத்தாராம்.

அதைப் பொருள்படுத்தாத காந்திராஜன், காரை அவா் மீது ஏற்றி சிறிது தூரம் இழுத்துச்சென்றுள்ளாா். இதை அங்கிருந்தவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

இதையறிந்த மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, காந்திராஜனை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

நான்குனேரியில் கோட்டாட்சியா் அலுவலகம் கோரி எம்.எல்.ஏ. மனு

நான்குனேரியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம், ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ மனு அளித்தாா். அதன் விவர... மேலும் பார்க்க

தசரா விழாவுக்கு தீச்சட்டிகள் தயாரிப்பு தீவிரம்

திருநெல்வேலியில் தசரா விழாவிற்காக மண் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திரு... மேலும் பார்க்க

ஏா்வாடியில் விவசாயிகள் கலந்துரையாடல்

களக்காடு அருகேயுள்ள ஏா்வாடியில் விவசாயிகள் கலந்துரையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பாக விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கருத்துப் பரிம... மேலும் பார்க்க

மகாராஜநகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மகாராஜநகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட மகாராஜநகா் வி.எம்.எஸ். மஹாலில் நடைபெற்ற இம்முகாமை, திருநெல்வேலி மத்திய மாவட்ட திம... மேலும் பார்க்க

நாராயணசாமி கோயிலில் தேரோட்டம்

களக்காடு அருகேயுள்ள மாவடி உடையடிதட்டு நாராயணசாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த செப்.7ஆம் தேதி ஆவணி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நா... மேலும் பார்க்க

களக்காடு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்தவா் தவசிக்கனி (70). இவரது மனைவி அ... மேலும் பார்க்க