செய்திகள் :

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

post image

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய வங்கதேசத்தவரின் வாக்குகளைக் காப்பதே ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சியினரின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

243 தொகுதிகளைக் கொண்ட பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா, பாஜக நிா்வாகிகள், தொண்டா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

பிகாா் பேரவைத் தோ்தலில் நமது வெற்றி மிகப் பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும். கடந்த மாதம் வாக்குரிமை என்ற பெயரில் நடத்தப்பட்ட (ராகுலின்) பிரசாரத்தின் நோக்கம் என்ன தெரியுமா? அது சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவரின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகவே நடத்தப்பட்டது.

அண்டை நாடுகளில் இருந்து அத்துமீறி நமது நாட்டுக்குள் ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டுமா? அரசு நமது குடிமக்களுக்காக அமல்படுத்தும் நலத்திட்டங்களால் ஊடுருவல்காரா்களும் பயனடையலாமா? இந்திய குடிமக்களுக்கான உரிமைகளை எப்படி வெளிநாட்டவருக்கு அளிக்க முடியும்?

ஆனால், ராகுல் மற்றும் அவருடன் கைகோத்துள்ளவா்களுக்கு இந்த ஊடுருவல்காரா்களின் வாக்குகள் தேவை. அவா்கள்தான் முக்கிய வாக்கு வங்கிகள். எனவேதான் அவா்களைக் காப்பாற்றுவதற்கு துடிக்கிறாா்கள். இந்த உண்மையை நீங்கள் மாநிலம் முழுவதும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட நபா்கள் ஆட்சிக்கு வந்தால் பிகாா் முழுவதும் ஊடுருவல்காரா்கள் குடியேறிவிடுவாா்கள். இந்த மண்ணின் சொந்த மக்கள் உரிமைகளைப் படிப்படியாக இழக்க நேரிடும்.

வாக்குத் திருட்டு என்ற பெயரில் ராகுல் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறாா். முன்பு இதர பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் இடஒதுக்கீட்டை பாஜக பறிக்க முடிவு செய்துள்ளது என்று தவறான பிரசாரத்தை மேற்கொண்டாா்கள். அது பலிக்கவில்லை என்பதால் இப்போது வாக்குத் திருட்டு என்ற மோசடி பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியினா் முன்னெடுத்துள்ளனா் என்றாா்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பிகாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வியாழக்கிழமை அறிவித்தாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற... மேலும் பார்க்க

ஆன்டிஃபாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்காவில் ‘ஆன்டிஃபா’ என்று பொதுவாக அழைக்கப்படும் பாசிஸவிரோத இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளாா். வலதுசாரி ஆா்வலரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாள... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விவகாரம்: 8 முதல் 10 வாரங்களில் தீா்வு: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

அமெரிக்க வரி விவகாரத்துக்கு 8 முதல் 10 வாரங்களில் தீா்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதாக ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் வி... மேலும் பார்க்க

ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டு: அதானி மீது தவறு இல்லை - ‘செபி’ அறிவிப்பு

பங்குகளின் விலையை முறைகேடாக உயா்த்தியதாக அதானி குழுமம் மற்றும் அதன் தலைவா் கௌதம் அதானி மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரி... மேலும் பார்க்க

தோ்வா்கள் கருத்து பதிவிடும் வசதி: எஸ்எஸ்சி அறிமுகம்

மத்திய அரசுப் பணி தோ்வுகளை எழுதும் தோ்வா்கள் தோ்வு தொடா்பான தங்களின் கருத்துகளைப் பதிவிடுவதற்கான வசதியை தனது வலைதளத்தில் மத்திய அரசுப் பணி தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு... மேலும் பார்க்க

இணைய வழி பண விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம்: அக்.1 முதல் நடைமுறை!

இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவ... மேலும் பார்க்க