செய்திகள் :

இணைய வழி பண விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம்: அக்.1 முதல் நடைமுறை!

post image

இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட ‘இணைய வழி விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 2025’ என்ற இச் சட்டத்தின் படி, பணம் வைத்து விளையாடும் அனைத்து வகை இணைய வழி விளையாட்டுகளும் தடை செய்யப்படும். அதே நேரம், பிற இணைய வழி விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படும்.

இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக, அத் துறை சாா்ந்த பல்வேறு தொழில்நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை மத்திய அரசு மேற்கொண்டது. மேலும், வங்கிகள் மற்றும் அந்த இணைய வழி விளையாட்டுகளுடன் தொடா்புடைய பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பிறகே, இச் சட்டம் இறுதி செய்யப்பட்டது.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட பிறகும், தொழில்நிறுவனங்களுடன் மத்திய அரசு மீண்டும் ஆலோசனை மேற்கொண்டது. அவா்களுடன் மேலும் ஓா் ஆலோசனையையும் மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

இந்த நிலையில், அச் சட்டத்தை வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை, அச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் அவகாசம் அளிக்குமாறு தொழில்நிறுவனங்கள் கோரினால், அதையும் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

இதனிடையே, பணம் வைத்து விளையாடும் இணைய வழி விளையாட்டில் பங்கேற்றுவந்த பயனா்கள் தங்கள் கணக்கில் வைத்துள்ள எஞ்சிய தொகையை திரும்பச் செலுத்துவதில் உள்ள உள்ள சிக்கல் குறித்து தொழில்நிறுவனங்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, வங்கிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.

ஒரே வலைதளத்தில் வருங்கால வைப்பு நிதி சேவைகள் தொடக்கம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா

தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சேவைகள் அனைத்தும் ஒரே வலைதளத்தில் பெறும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். 7 கோட... மேலும் பார்க்க

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரகண்டின் சமோலி மாவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; இடிபாடுகளில் புதைந்த மேலும் 11 பேரை ம... மேலும் பார்க்க

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நிதியமைச்சகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. கடந்த ஏப்.1-ஆம் தேதிமுதல் தேசிய ஓய்வூதிய அமைப்ப... மேலும் பார்க்க

அதானி நிறுவனத்துக்கு எதிரான இணையதள தகவல்களை நீக்கும் உத்தரவு ரத்து

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த ... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய குற்றச்சாட்டில் சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்களை (நுழைவுஇசைவு) ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் வியாழக்... மேலும் பார்க்க