செய்திகள் :

10-ம் வகுப்பு முடிவுகள்: தூத்துக்குடி 3-வது இடம்! 96.76% தேர்ச்சி!

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு தேர்வில் 96.76 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து இந்த மாவட்டம் 3 ஆவது இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308 நடுநிலைப் பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் நிகழாண்டு 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து தேர்ச்சி விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் 3 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 94.39 சதவீதம் தேர்ச்சி பெற்று 9 ஆவது இடத்திலிருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டு 96.76 சதவீதம் தேர்ச்சி பெற்று 3 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: முழு விவரம்!

சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி

கரூர் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசு பேருந்து மோதிவிட்டு எதிரே வந்த சுற்றுலா வேன் மீதும் மோதியதில் பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கரூர் அடுத்த மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோதுர் பிரி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில் தேர்த் திருவிழா

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள... மேலும் பார்க்க

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம்: அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். தமிழ்நாட்டிலிருந்து அரசு மானியத்துடன் ஹஜ் ப... மேலும் பார்க்க