செய்திகள் :

10 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம்: அன்புமணி அறிவிப்பு

post image

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனினும் பாமகவில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று சென்னை வந்துள்ள ராமதாஸ் கூறியுள்ளார்.

இதனிடையே அன்புமணி 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்துவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது.

முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

1. 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்

2. 15.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்

3. 16.06.2025 திங்கள் காலை 10.00 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்

4. 16.06.2025 திங்கள் மாலை 03.00 மணி -இராணிப்பேட்டை மாவட்டம்

5. 17.06.2025 செவ்வாய் காலை 10.00 மணி - வேலூர் மாவட்டம்

6. 17.06.2025 செவ்வாய் மாலை 03.00 மணி -திருப்பத்தூர் மாவட்டம்

7. 18.06.2025 புதன் காலை 10.00 மணி - திருவண்ணாமலை மாவட்டம்

8. 18.06.2025 புதன் மாலை 03.00 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம்

9. 19.06.2025 வியாழன் காலை 10.00 மணி -சேலம் மாவட்டம்

10. 19.06.2025 வியாழன் மாலை 03.00 மணி -தருமபுரி மாவட்டம்

மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள்.

சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ராகுல் - சித்தராமையா சந்திப்பில் பேசியது என்ன?

பாஜக கூட்டணியில் இறுதிவரை இருப்பாரா இபிஎஸ்? - அப்பாவு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இறுதிவரை கூட்டணியில் இருப்பாரா என்பதே கேள்விக்குறி என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க வ... மேலும் பார்க்க

நியாய விலைக்கடை விற்பனையாளர் பணி: நேர்முகத் தேர்வு அறிவிப்பு!

சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் நடத்தும் விற்பனையாளர் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

கனமழை: 7 மாவட்டங்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.தமிழக... மேலும் பார்க்க

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம்!

மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு – உயர்சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்புவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுத... மேலும் பார்க்க

தமிழகத்தில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைவதால் தமிழகத்தில் மிக கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையினால்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 ... மேலும் பார்க்க