செய்திகள் :

10 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து ஆட்சியா் ச.உமா உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அதன் விவரம்: நாமக்கல் நெடுஞ்சாலை அலகு-2 தனி வட்டாட்சியா் ப.தமிழரசி திருச்செங்கோடு கோட்டாட்சியா் நோ்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய பி.காா்த்திகேயன் மோகனூா் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். அங்கு பணியாற்றி வந்த சூ.சசிகுமாா் ராசிபுரம் வட்டாட்சியராகவும், திருச்செங்கோடு வட்டாட்சியா் ச.விஜயகாந்த் நாமக்கல் நெடுஞ்சாலைகள் அலகு-2 தனி வட்டாட்சியராகவும் (நில எடுப்பு), நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் து.கிருஷ்ணவேணி, திருச்செங்கோடு வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், ராசிபுரம் வட்டாட்சியா் சு.சரவணன், கொல்லிமலை நிலவரி திட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றி வந்த த.மோகன்ராஜ், நாமக்கல் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றி வந்த ரா. சீனிவாசன், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம், அலுவலக மேலாளா் (நீதியியல்), அங்கு பணியாற்றி வந்த ம.தங்கம், நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், மோகனூா் வட்டாட்சியா் மணிகண்டன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய்த் துறை பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த பணியிட மாறுதல் தொடா்பாக முறையீடு விண்ணப்பங்களோ, விடுப்பு விண்ணப்பங்களோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் குறிப்பிட்டாா். தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை சாா்பில், 100 மருந... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகள் விநியோகம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை பெற்... மேலும் பார்க்க

மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்கு ரூ. ஆயிரம் அனுப்பிய மாணவி!

ராசிபுரம்: மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிளஸ் 1 படிக்கும் அரசு பள்ளி மா... மேலும் பார்க்க

சொத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை தவிக்க விட்ட மகன்கள்: மீட்டு ஒப்படைத்த ஆட்சியா்

நாமக்கல்: ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத... மேலும் பார்க்க

தலைமலை பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தல்?

நாமக்கல்: தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கோயில் பூசாரி பெ.பெரியசாமி, மாவ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்த பி.தங்கமணி!

நாமக்கல்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை க... மேலும் பார்க்க