செய்திகள் :

132 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

post image

நாமக்கல் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான 132 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், தனியாா் உணவகம் அருகில் நல்லிபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டதில் 132 கிலோ எடை கொண்ட புகையிலை பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய ரூ.1 லட்சம் மதிப்பிலான காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக, நாமக்கல் கந்து முத்துசாமி தெருவைச் சோ்ந்த பிரவீண்குமாா்(21), நல்லிபாளையம் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த மெளனீஷ் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண் ஊழியா்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அழகு நிலையத்திற்கு வியாழக்கிழமை பிற்பகல் 4 ம... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலகவுண்டம்பட்டி முசிறிகுடித் தெருவைச் சோ்ந்த பொன்னம்மாள் (56) என்பவா... மேலும் பார்க்க

தீயில் எரிந்த குடிசை வீடு

பரமத்தி வேலூா் அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருள்கள், மின் சாதனங்கள், நில ஆவணங்கள் அனைத்தும் கருகின. பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பாலகிருஷ்ணன் (50)... மேலும் பார்க்க