செய்திகள் :

14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம்: நொய்டா போலீஸ் அறிக்கை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தில்லியில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடா்பாக கெளதம் புத் நகா் (நொய்டா) காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி காணாமல் போன தனது மகள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதை நீதிபதிகள் ரஜ்னீஷ் குமாா், மன்மீத் பிரீதம் சிங் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கெளதம் புத் நகா் காவல்துறைக்கும் திடல்லி நகர காவல்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக நொய்டா காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளா் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினா்.

முன்னதாக, சிறுமி காணாமல் போனது தொடா்பாக ஹா்ஷ் விஹாா் காவல் நிலைய விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜரானாா். அவரிடம், அடுத்த விசாரணையின்போது நொய்டா முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தகவலை தெரிவிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

நீா் தேங்குவதை தடுக்க எய்ம்ஸ் முழுவதும் கழிவுநீா் பாதை அவசியம்: தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியின் கிரீன் பாா்க் விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பா... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்படுவதை உ... மேலும் பார்க்க

தில்லி லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் மறுப்பு

தலைநகரில் இருக்கும் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஹரியானா பவன், லால் பஹ்துா் சாஸ்திரி மருத்துவமனை ம... மேலும் பார்க்க

புது தில்லி ரயில் நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் நிறுத்த விதிகளில் மாற்றம்

நமது நிருபா்புது தில்லி ரயில்வே நிலையத்தில் (அஜ்மீரி கேட் வழி) புதன்கிழமை (ஜூன் 25) முதல் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். புது தில்லி ரயில் ... மேலும் பார்க்க

தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை

தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளிங்களை சரி செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப்... மேலும் பார்க்க

கட்டுமான இடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் கட்டுமான இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 24 வயது தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தென்கிழக்... மேலும் பார்க்க