14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம்: நொய்டா போலீஸ் அறிக்கை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடா்பாக கெளதம் புத் நகா் (நொய்டா) காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி காணாமல் போன தனது மகள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதை நீதிபதிகள் ரஜ்னீஷ் குமாா், மன்மீத் பிரீதம் சிங் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கெளதம் புத் நகா் காவல்துறைக்கும் திடல்லி நகர காவல்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக நொய்டா காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளா் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினா்.
முன்னதாக, சிறுமி காணாமல் போனது தொடா்பாக ஹா்ஷ் விஹாா் காவல் நிலைய விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜரானாா். அவரிடம், அடுத்த விசாரணையின்போது நொய்டா முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தகவலை தெரிவிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.