செய்திகள் :

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர் சமீரா பாதிமா என்று தெரிய வந்தது.

அவர் பல ஆண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கான ரூபாயை ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண்ணை நாக்பூர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரை ஒரு முறை போலீஸார் மடக்கினர். ஆனால் அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அதன் பிறகுதான் அவர் பொய் சொன்னது தெரிய வந்தது.

திருமணம் செய்து ஏமாற்றியது எப்படி?

இதையடுத்து நீண்ட தேடுதலுக்கு பிறகு நாக்பூரில் உள்ள தேநீர் கடை ஒன்றில் வைத்து அப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அப்பெண்ணிடம் விசாரித்தபோது பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கடந்த 15 ஆண்டில் 8 ஆண்களை திருமணம் செய்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். அதில் ஒருவரிடம் ரூ.50 லட்சமும், மற்றொருவரிடம் ரூ.15 லட்சமும் பறித்துள்ளார். மிரட்டி பணம் பறிக்கும் கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு பணக்காரர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

9வது நபரை திருமணம் செய்ய சரியான ஆள் தேடிக்கொண்டிருந்தபோது அவரை கைது செய்தோம். தனக்கு தேவையான ஆட்களை மேட்ரிமோனியல் தளம் மூலம் தேடுவதை சமீரா வழக்கமாக கொண்டிருந்தார். பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு தான் ஆதரவு இல்லாத விதவை என்றும், குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதாக கூறி அனுதாபத்தை ஏற்படுத்திக்கொள்வார்.

அதில் சிக்குபவர்களிடம் நயமாக பேசி பதிவுத்திருமணம் செய்து கொள்வது வழக்கம். பின்னர் அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்வது வழக்கம். இதில் ஆண்கள் பேசுவதை ரகசியமாக தனது மொபைல் போனில் பதிவு செய்து கொள்வார். அந்த உரையாடலை எடிட் செய்து தனக்கு சாதமகமாக மாற்றிக்கொள்வார். அதோடு தனது கணவர்கள் மீது துன்புறுத்தல் மற்றும் திருமணம் தாண்டிய உறவு தொடர்பாக போலீஸில் புகார் செய்வார். பின்னர் வழக்கை திரும்ப பெறுவதாக கூறி மிரட்டி பணம் வசூலிப்பது வழக்கம்.

சமீரா நன்கு படித்தவர். அவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். ஆனால் திருமணம் செய்து கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் தொழிலையும் சேர்த்து செய்து வந்தார்''என்று தெரிவித்தார்.

கடைசியாக குலாம் பதான் என்பவரை 2022ம் ஆண்டு திருமணம் செய்தார். அவரிடம் ரூ.10 லட்சத்திற்கு காசோலை வாங்கிக்கொண்டு அவர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்தே சமீராவிற்கு எதிராக குலாம் போலீஸில் புகார் கொடுத்தார். குலாமை தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதாக சமீரா தெரிவித்தார். உடனே குலாம் தனது வழக்கறிஞரிடம் இது குறித்து கலந்து ஆலோசித்தார். ஏற்கனவே அவரை போலீஸார் தேடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து இது குறித்து போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

குலாம் வழக்கை வாபஸ் பெற உயர் நீதிமன்றத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். சமீராவும் உயர் நீதிமன்றத்திற்கு வந்தார். உடனே அவரை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருக்கு 12 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னை: தினமும் பாலியல் டார்ச்சர் - இளைஞரை சிக்க வைத்த இளம்பெண்

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது அவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திர... மேலும் பார்க்க

கொல்கத்தா: போலி ஆதார், ரேஷன் கார்டுடன் கைதான வங்கதேச நடிகை சாந்தா பால்; விசாரணையில் பகீர் தகவல்

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது ... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: "எலி மருந்தைச் சாப்பிட்டுச் சாவு" - கணவன் தற்கொலை; காதலனுடன் வெளியேறிய மனைவி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் (45). கூலித்தொழிலாளரான சர்வேஷ் மனைவி ரிங்கி. இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் அதே தெருவில் ஹகீம் என்பவருடன் ரி... மேலும் பார்க்க

ஜூஸில் பூச்சிமருந்து கலந்து ஆண் நண்பனைக் கொன்று நாடகம்; கிரீஷ்மா பாணியில் அதிரவைத்த இளம்பெண்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் போலீஸுக்கு போன்செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்... மேலும் பார்க்க

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க