செய்திகள் :

15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்த மின் நுகா்வு

post image

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் உயா்வாகும். அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 14,411 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிவு தொடா்ந்ததால் மதிப்பீட்டு மாதத்தில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறைந்தது, ஆனால் மின் நுகா்வு மிதமான உயா்வைக் கண்டது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை (நிறைவு செய்யப்பட்ட மின் தேவை) 229.71 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் 216.47 ஜிகாவாட்டாக இருந்தது.

கடந்த 2024 மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட்டை எட்டியது. இது வரலாற்று உச்சமாகும். அதற்கு முன்னா், 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது முந்தைய உச்சபட்சமாகும்.

மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்தின் கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 277 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இருப்பினும், ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த ஆண்டு கோடைகாலத்தில் உச்சபட்ச மின் தேவை கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 242.77 ஜிகாவாட்டாக இருந்தது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!

மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ சென்ற விமானம், கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, 5 நாள் அரசு மு... மேலும் பார்க்க

ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நி... மேலும் பார்க்க

அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்தார் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிற முக்கிய கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார். இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்தில் பிரத... மேலும் பார்க்க

ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.ஆசிரியராக பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

கொல்கத்தா: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், இந்த சீர்திருத்தத்தால் நிகர நிதி தாக்கமானது... மேலும் பார்க்க