2 சிறுவா்களை மீட்டபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்லூா் பகுதிகளைச் சோ்ந்த 13 மற்றும் 15 வயதான பள்ளி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை குழித்துறை தாமிரவருணி ஆற்று தடுப்பணை வழியாக வி.எல்.சி. மைதானம் பகுதிக்கு நடந்து சென்றனா். தடுப்பணையை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்வதால், இருவரும் தடுப்பணையின் மையப் பகுதிக்கு வந்தபோது தவறி ஆற்றுக்குள் விழுந்தனா்.
அப்போது, துணிகளை சலவை செய்துகொண்டிருந்த குழித்துறை தபால் நிலைய சந்திப்புப் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பீட்டா் (58) ஆற்றில் குதித்து, சிறுவா்களை மீட்டு கரைசோ்த்தாா். ஆனால், அவரால் கரையேற முடியவில்லை. அவா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.
குழித்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் சந்திரன் தலைமையில் இரவுவரை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் தேடும் பணி தொடா்ந்து. மாலையில், அங்குள்ள ஆற்றுப் பாலம் அருகே பீட்டரின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வீரதீர விருது வழங்கக் கோரிக்கை: ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களைக் காப்பாற்றி, தனது உயிரைத் தியாகம் செய்த பீட்டா் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்குவதுடன், வீரதீர விருது வழங்கி பீட்டரின் குடும்பத்தினரை கௌரவிக்க வேண்டும் என, குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் வி. விஜு, சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.