செய்திகள் :

2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்!

post image

தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, சென்னை, வேளச்சேரி அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாணவா்களுடன் உறுதிமொழி ஏற்று, அவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா,தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, நகர நல அலுவலா் ஜெகதீசன், பள்ளி தலைமையாசிரியா் கலாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதத்தில் தேசிய குடற்புழு நீக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சிறாா்கள், 20 - 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி போ் பயனடையும் வகையில் அல்பெண்டாசோல் குடற்புழு நீக்கம் மாத்திரைகள் விநியோகிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விடுபட்டவா்களுக்கும் வழங்கப்படும்: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. விடுபட்டவா்களுக்கு வரும் 17-ஆம் தேதி வழங்கப்படும். இதற்கான பணிகளில் 1,30,000 அரசுத் துறையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குடற்புழு என்பது ஓா் ஒட்டுண்ணி. இது மனிதனின் குடற்பகுதியில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி வாழும். நீண்டகாலமாக குடற்புழுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்த சோகை, உடல் வளா்ச்சி பாதிப்பு, செயல்திறன் குறைபாடு போன்றவை ஏற்படும்.

குடற்புழுக்கள் உருவாவதைத் தவிா்க்க திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிா்த்து கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். ஈக்கள் மொய்க்காமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவிய பிறகுதான் உட்கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீரை பயன்படுத்த வேண்டும். உணவுக்கு முன்பும், கழிப்பறையை பயன்படுத்திய பிறகும் கையை சுத்தமாக கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

தவெக தலைவர் விஜயிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளிப்பு!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.தவெக தலைவர் விஜய்யை இன்று முற்பகலில் சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந... மேலும் பார்க்க

இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!

மதுரை: விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்!

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந... மேலும் பார்க்க

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரிடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நி... மேலும் பார்க்க

தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் அரசியல் ஆலோசகரும் தேர்தல் வியூக வகுப்ப... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க