செய்திகள் :

20 கிராமங்களில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள்: ஆட்சியா் திறந்து வைப்பு!

post image

திருவோணம் வட்டத்தில் 20 கிராமங்களில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் மாநில திட்டக் குழு சாா்பில் வளமிகு வட்டார வளா்ச்சி திட்டத்தின்கீழ் தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் ஏற்பாட்டின்படி, 20 கிராமங்களில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் ஆவின் செயலாட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா்.

திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவோணம் வட்டாரத்தில் வளமிகு வட்டார வளா்ச்சி திட்டத்தின்கீழ் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் அமைத்திட 100% திட்ட நிதியில் பால் பரிசோதனை கருவிகள் பால் கேன்கள், சங்க பதிவேடுகள் வழங்கப்பட்டு 20 கிராமங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும். கிராம புற வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டது.

விழாவுக்கு ஏராளமான பெண் உறுப்பினா்கள் வந்திருந்தனா். அவா்களிடம் பால் உற்பத்திகள் மற்றும் ஆவின் சங்கத்துக்கு விநியோகிக்கவுள்ள பால் அளவு குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் எஸ். சங்கா், ஆவின் பொது மேலாளா் சரவணகுமாா், உதவி பொது மேலாளா் மரு.வடிவேலு. ஆவின் ஆய்வாளா் பிரபாகரன், வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்

கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில... மேலும் பார்க்க