செய்திகள் :

20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்! - பட்ஜெட்டில் அறிவிப்பு!

post image

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.

பேரவையில் பேசிய அவர்,

"தமிழ்நாட்டில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்திலும், காடும் காடு சார்ந்த முல்லை நிலத்திலும் மக்கள் எவ்வாறு வேளாண்மை செய்தார்கள் என்று சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இப்பகுதிகளில் மானாவாரிப் பயிர்களான வரகு. தினை, கம்பு போன்றவை பயிரிடப்பட்டதையும், அவற்றை மலை மகளிர் பாதுகாப்பதையும் கண் முன்னே விரிக்கின்றன.

"குருவி ஒப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றவைகி அருவி ஆடியும் சுனை குடைந்தும்"

என்ற வரியில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பெண்கள் தினைப்புனங்களில் குருவிகளை ஓட்டியும், கிளிகளை விரட்டியும், பயிரினைக் காத்தும் தொழிலை மேற்கொண்டதை சிலப்பதிகாரம் எடுத்துக் கூறுகிறது.

இதையும் படிக்க |மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு!

பல்வேறு திட்டங்களில் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்த போதிலும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்து சுற்றுச்சூழலுக்கும், உயிரியல் பன்மயத்திற்கும் பாதுகாப்பு அளித்துவரும் மலைவாழ் உழவர்களுக்கென சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி அவர்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்த வேண்டியது அவசியம்.

2025-26 ஆம் ஆண்டில் சுமார் 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், குறுதானிய சாகுபடி, இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப்பயிர்களில் பரப்பு விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றிற்கு மானியம் வழங்கிட 22 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலைவாழ் உழவர் முன்னேற்றத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், இப்பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டம் திருவண்ணாமலை. நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், திருப்பத்தூர். திருநெல்வேலி, வேலூர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தருமபுரி. ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்" என்றார்.

இதையும் படிக்க | வேளாண் பட்ஜெட்: கரும்பு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள்!

பேரவைத் தலைவரை ஏன் சந்தித்தேன்? செங்கோட்டையன் விளக்கம்

பேரவைத் தலைவரை சந்தித்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்களித்துள்ளார்.அதில், பேரவைத் தலைவரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது வழக்கமானது. இன்றுகூட 6, 7 அதிமுக உறுப்பினர்கள் பேரவ... மேலும் பார்க்க

ஹிந்தி சர்ச்சை: பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமல்! -திமுக எதிர்வினை

பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருப்பதாக திமுக தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டுள்ளது. வணிக ரீதியாக பலனடைய வேண்டி தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்... மேலும் பார்க்க

ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

மார்ச் 23இல் சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிற... மேலும் பார்க்க

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகாக கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்திசெய்ய... மேலும் பார்க்க

முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழல்: எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? சீமான் கேள்வி

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ... மேலும் பார்க்க