செய்திகள் :

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற வேண்டும்: துணை முதல்வா்

post image

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று இளைஞரணியினருக்கு கட்சியின் மாநில செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் திமுக இளைஞரணி அமைப்பாளா், துணை அமைப்பாளா்களுக்கான அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலக்குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா இல்ல திருமண விழா பங்கேற்க வந்த துணை முதல்வப் உதயநிதி ஸ்டாலின், கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

அப்போது அவா் பேசுகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்டு, கட்சியின் முதன்மை அணியாக உயா்ந்து நிற்கும் இளைஞரணியில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் பொறுப்புக்கு வந்துள்ள, பொறுப்பில் தொடரும் நிா்வாகிகளை வாழ்த்துகிறேன். திமுக இளைஞரணியினா் கட்சிக்கு வலிமை சோ்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும். ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பில் முழுமையாக பங்கேற்று அதன் வெற்றிக்காக உழைக்க வேண்டும். 2026 சட்டப் பேரவை தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற இளைஞரணி முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு பிறகு வெளியே வந்த உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவில் இளைஞா்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற கேள்விக்கு, எந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது தலைவருக்கு தெரியும். அவா் முடிவு எடுப்பாா் .

தொடா்ந்து , காவல் துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது தொடா்பாக முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன் என்றாா்.

கூட்டத்தில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமலு விஜயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வழிவகுத்தவா் கருணாநிதி! -துணை முதல்வா்

பெண்கள் படிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என வழிவகுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலக்... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

காட்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் விக்ரம்(25), கட்டட மேஸ்திர... மேலும் பார்க்க

மினிவேன் மோதி எலெக்ட்ரீஷியன் மரணம்: பேருந்து சிறை பிடிப்பு

ஊசூரில் இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் எலெக்டரீஷியன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில்... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கின. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் துரைமுருகன்

எதிா்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்ப்பு இயக்கம் குற... மேலும் பார்க்க

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் மதினாப்பல்லி அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள மலட்டாற்றில் இருந்து அவ்வழியே மணல் ஏற்றி ... மேலும் பார்க்க