செய்திகள் :

200MP கேமராவுடன் புதுவரவாக 3 மொபைல்கள்! எதை வாங்கலாம்?

post image

200MP கேமராவுடன் மூன்று புதிய மொபைல்களை புதுவரவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் சிறப்பம்சங்கள் விலை விவரம் குறித்து இங்கு பார்க்கலாம்.

அதிகமான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து ரசிப்பவராக இருந்தால் அவர்களுக்கெனவே 200 மெகா பிக்சல்களுடன் மூன்று புதிய மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. DSLR கேமராக்களின் பயன்பாடு குறைந்துவரும் நிலையில், மொபைல் போனிலேயே புகைப்படங்கள் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிகமான புகைப்படங்கள் எடுப்பவர் மட்டுமின்றி, சமூகவலைதளங்களில் அதிகமான நேரம் செலவிடுபவர், கேமிங்கில் ஆர்வமிக்கவர் என்றால் இந்த மூன்று போன்களும் அவர்களுக்கு அனைத்துவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா - Samsung Galaxy S25 Ultra

முதலாவதாக பார்க்கப்போவது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா. இது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், 200MP-யில் முதன்மை கேமராவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தெளிவாகவும் துல்லியமாகவும் படம் எடுக்க உதவும். அதேபோன்று டெலிபோட்டோ மற்றும் அல்ட்ரா வைடாக முறையே 50MP மற்றும் 10MP கேமராவும், செல்ஃபிக்கு 12MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 12 ஜிபி உள் நினைவகத்துடன் 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை; ரூ.103,999-ல் இருந்து தொடங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா - Samsung Galaxy S24 Ultra

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் மலிவுவிலை பதிப்பான இந்த எஸ்24 எந்தவிதத்திலும் எஸ்25 -க்கு சலித்தது இல்லை என்ற வகையில் தனது செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

அதைப் போலவே 200MP-யில் முதன்மை கேமரா, செல்ஃபி கேமராக்கள், மற்ற கேமராக்கள், 5000 mAh பேட்டரி என ஒத்த வடிவத்தைக் கொண்டிருந்தாலும், அளவில் 6.8 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.1,34,999 என கொடுக்கப்பட்டிருந்தாலும், 33 சதவிகித தள்ளுபடி விலையில் ரூ.89,989-க்கும் பெற்றுக் கொள்ளலாம்.

ரெட்மி நோட் 13 புரோ - Redmi Note 13 Pro

மிகக்குறைந்த விலையில் 200MP-யில் முதன்மை கேமராவுடன் ரூ.25,000-க்கு குறைவாக வாங்க விரும்புவர்களுக்கு இந்த மொபைல் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த போன் குறைந்த விலையில் பிரீமியம் அனுபவத்தைத் தருகிறது.

6.67 அங்குலத் திரையுடன் 5000 mAh பேட்டரி திறனில் நாள் முழுவதும் நீடிக்கும் மற்றும் வேகமான சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.18,000-லிருந்து தொடங்கிறது.

இதையும் படிக்க: ரூ.32,000 தள்ளுபடி விலையுடன் சாம்சங் கேலக்ஸி ஸீ ஃபோல்ட் 6!

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க