செய்திகள் :

2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

post image

2025-ம் ஆண்டில் மட்டும், ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட காலத்தில், அந்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியது முதல், தலிபான்கள் தலையமையிலான இடைக்கால அரசு அந்நாட்டை ஆட்சி செய்து வருகின்றது.

இதில், ஆப்கன் அகதிகள் அதிகளவில் குடியேறிய ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள் அவர்கள் தங்களது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நிகழாண்டில் மட்டும் ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்குத் திரும்பியுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

“நிகழாண்டில் (2025) நாடு திரும்பிய சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள அந்நாடு தயாராக இல்லை. உடனடியாக, அவர்களுக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகின்றோம்” எனக் கூறியுள்ளது.

முன்னதாக, நாடு திரும்பும் ஆப்கன் மக்கள் வறுமை, வேலையின்மை ஆகியவற்றின் மூலம் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கக் கூடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!

The United Nations High Commissioner for Refugees has announced that about 2.3 million Afghans have returned to their homeland from Iran and Pakistan in 2025 alone.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

ஜப்பானில், தவறுதலாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைக் கைதி ஒருவரின் கல்லறையில் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர். டோக்கியோவுக்கு அருகில் அமைந்துள்ள யோகோஹாமா நகரத்தில் உள்ள... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

ஆஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டுக்கான ஈரானின் தூதர் அஹமது சடேகி வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில், யூதர்களுக்கு எதிராகக் குறைந்தது 2 தாக்குதல்களையாவது ஈரான் அரசு இயக்கியதாக, ... மேலும் பார்க்க

இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 17 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள மாகாணங்களில் திடீர் ... மேலும் பார்க்க

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல் காரணமாக, சுத்திகரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு ரஷியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பல உலக நாடுகளுக்கும் எரிபொருள் ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

இந்தியா மீது, கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்திருக்கும் நாளில், அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமரிசித்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனா... மேலும் பார்க்க

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் புதன்கிழமை கொல்லப்பட்டனர். மேலும், 14 குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மினசோட்டா மாகாணம், மினீயாபொலிஸ் நகரில் உள... மேலும் பார்க்க