செய்திகள் :

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

post image

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா்.

திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றாா். இந்நிலையில், கோவைக்கு சனிக்கிழமை வந்த அவருக்கு கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, காளப்பட்டியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: கூட்டணியைப் பற்றி கட்சித் தொண்டா்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அது தொடா்பாக சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். பாஜக நிா்வாகிகள் பூத் கமிட்டியை சரி செய்ய வேண்டும். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் நாம் வெற்றி பெற்று அதிகப்படியான உறுப்பினா்களுடன் சட்டப் பேரவைக்குச் செல்வோம்.

திமுக ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும். அதிமுக தலைவா்கள், தொண்டா்களோடு இணைந்து நாம் பணியாற்ற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட கோவை கோட்டத்தின் 8 மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விசைத்தறி உரிமையாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு:

கூலி உயா்வுக் கோரி திருப்பூா் மற்றும் கோவை மாவட்டங்களைச் சோ்ந்த விசைத்தறி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கடந்த 30 நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா். சூலூா் அருகேயுள்ள சோமனூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 5 நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவைக்கு சனிக்கிழமை வந்த நயினாா் நாகேந்திரன், சோமனூரில் விசைத்தறி உரிமையாளா்களை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

அப்போது, இந்தப் பிரச்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி! உதவி ஆய்வாளா் முதலிடம்

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடம் பிடித்தாா். கோவை மாநகரில் காவல் ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ந... மேலும் பார்க்க

திருடிய இருசக்கர வாகனத்தில் இருந்த ஏடிஎம் அட்டை மூலமாக பணம் திருட்டு!

வடவள்ளியில் இருசக்கர வாகனத்தைத் திருடி அதில் இருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி திருவள்ளுவா் நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அக... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவை மாநகரில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பொம்மணம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கா் வழக்குகள் விவகாரம்: 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரம்!

யூடியூபா் சவுக்கு சங்கா் மீதான 15 வழக்குகளில் 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் யூடியூப் சேனலில் மகளிா் ப... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் ‘நம் நலம்’ என்ற பெயரில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிகேஎன்எம் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வே... மேலும் பார்க்க

வெள்ளியங்கிரி மலையில் தவறி விழுந்து இளைஞர் பலி!

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை எரியத் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஏழாவது மலையில் இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கைலாயம் எனப் பக்தர்களா... மேலும் பார்க்க