செய்திகள் :

2026 இறுதிக்குள் நாட்டின் ஏற்றுமதி 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும்!

post image

2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயரும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் வணிகப் பொருள்கள் ஏற்றுமதி மட்டும் 525 முதல் 535 மில்லியன் டாலராக இருந்தது. அதாவது முந்தைய ஆண்டை விட இது 12% அதிகமாகும். இதேபோன்று சேவைத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் 465 முதல் 475 பில்லியன் டாலராக இருந்தது. இது 20% வளர்ச்சியாகும்.

2024 - 25 நிதியாண்டில் ஏற்றுமதி துறையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 824.9 பில்லியன் டாலராக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இது 778.1 பில்லியனாக இருந்தது. இது 6.01% உயர்வாகும்.

2025 நிதியாண்டில் மட்டும் சேவைத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் 13.6% அதிகரித்து 387.5 பில்லியனாக உள்ளது. தொழில்நுட்பத் துறை, தொழில் துறை, நிதி பயணங்கள் தொடர்பான சேவைகளின் சிறந்து விளங்கியமையால் சேவைத் துறையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.

வணிக பொருள்கள் ஏற்றுமதி 437.4 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருள்கள் அல்லாத சரக்குகள் ஏற்றுமதி 374.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6% உயர்வாகும்.

சரக்கு மற்றும் சேவைகள் துறை ஏற்றுமதியில் நாடு தொடர்ந்து நிலையான வளர்ச்சியை எட்டி வருவதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரால்ஹன் தெரிவித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்புப் பொருள்களின் வாழ்க்கை சுழற்சி மேலாண்மை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையிலான வழிகாட்டுதல்களை அரசு செய்துகொடுத்தால், உள்நாட்டுத் தயாரிப்புகள் மேலும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டார்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க