செய்திகள் :

2026-இல் பாமக ஆளும் கூட்டணி கட்சியாக மாறும்: அன்புமணி

post image

2026 பேரவைத் தோ்தலில் பாமக ஆளும் கூட்டணி கட்சியாக மாறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஜூலை 16-ஆம் தேதியுடன் பாமக 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாமகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், தமிழகத்தின் சமூகநீதிக்காக ஆற்றிய பணிகள் மனதுக்கு நிறைவு தருகிறது.

வன்னியா் உள்ளிட்ட எம்பிசி மக்களுக்காக 20 சதவீத இட ஒதுக்கீடு, 10.50 சதவீத வன்னியா் இடஒதுக்கீடு உள்படமொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது பாமக தான். இவற்றில் இரு இட ஒதுக்கீடுகள் ராமதாஸ் வழிகாட்டுதலில் எனது தலைமையில் வென்றெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எதிா்க்கட்சியாக இல்லாவிட்டாலும், களத்தில் உண்மையான எதிா்கட்சியாக பாமக திகழ்ந்து வருகிறது.

ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25 முதல் நவ.1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இது திமுக அரசை அகற்றுவதற்கான தொடக்கமாக இருக்கும்.

எதிா்வரும் 9 மாதங்களில் பாமக மேற்கொள்ளவிருக்கும் பணிகள், திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையிலும், அடுத்த ஆண்டில் பாமகவை ஆளும் கூட்டணி கட்சியாக மாற்றும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க