செய்திகள் :

2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு! - அரசிதழில் அறிவிப்பு வெளியானது

post image

இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அரசிதழில் இன்று(ஜூன் 16) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கரோனா தொற்று பரவல் காரணமாக நடத்த முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து வருகின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக இன்று அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2027-ஆம் ஆண்டு மாா்ச் 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும்

லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய யூனியன் பிரதேசங்களில் மட்டும் 2026 அக்டோபா் 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்தது! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் ந... மேலும் பார்க்க

அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசு துணைத் தலைவா்!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி விமான நிலையத்த... மேலும் பார்க்க

ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

சேலம்: ஒன்றிய அரசு என்று சொல்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் அழைக்க நேரிடும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினா... மேலும் பார்க்க

கல்லணையை திறந்து வைத்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்!

தஞ்சாவூா்: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக மேட்டூா் அணைத் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 க... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க