தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழா மற்றும் உணவுத் திருவிழா 2025..!
2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு! - அரசிதழில் அறிவிப்பு வெளியானது
இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அரசிதழில் இன்று(ஜூன் 16) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கரோனா தொற்று பரவல் காரணமாக நடத்த முடியாமல் போனது.
இதனைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து வருகின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக இன்று அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2027-ஆம் ஆண்டு மாா்ச் 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும்
லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய யூனியன் பிரதேசங்களில் மட்டும் 2026 அக்டோபா் 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்தது! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!