செய்திகள் :

21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு இந்தியாவைத் தயாா்படுத்திய ராஜீவ் காந்தி- காங்கிரஸ் புகழஞ்சலி

post image

‘21-ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இந்தியாவைத் தயாா்படுத்துவதில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் தொலைநோக்கு மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகித்ததாக அவரது நினைவுநாளில் காங்கிரஸ் புகழஞ்சலி செலுத்தியது.

இந்தியாவின் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராஜீவ் காந்தியை நினைவுகூா்வதாக பிரதமா் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினாா்.

தில்லியில் வீர பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அப்பா, உங்கள் நினைவுகள் என்னை எப்போதும் வழிநடத்துகின்றன. உங்களின் நிறைவேறாத கனவுகளை நனவாக்குவதே எனது தீா்மானம். நான் அதை நிச்சயம் செய்வேன்’ எனக் குறிப்பிட்டாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘ராஜீவ் காந்தி இந்தியாவின் சிறந்த மகன். லட்சக்கணக்கான இந்தியா்களிடையே நம்பிக்கையை அவா் ஊக்குவித்தாா். 21-ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இந்தியாவை தயாா்படுத்துவதில் அவரது தொலைநோக்கு மற்றும் துணிச்சலான நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகித்தன.

வாக்களிக்கும் வயதை 18-ஆக குறைத்தல், பஞ்சாயத்து அமைப்பை வலுப்படுத்துதல், தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை முன்னெடுத்துச் செல்வது, கணினிமயமாக்கல் திட்டத்தைச் செயல்படுத்துதல், நீடித்த மற்றும் நிலையான அமைதி ஒப்பந்தங்களை இறுதி செய்தல், உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தைத் தொடங்குதல், புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அவரின் முக்கியப் பங்களிப்புகள் ஆகும்’ எனக் குறிப்பிட்டாா்.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நமது நாட்டின் அடித்தளத்தை ராஜீவ் காந்தியின் தொலைநோக்குத் தலைமை உருமாற்றியதாக காங்கிரஸின் அதிகாரபூா்வ பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் குறிப்பிடப்பட்டது.

காங்கிரஸ் பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த நிா்வாகிகளும் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி, சமூக ஊடகங்களில் பதிவிட்டனா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க