செய்திகள் :

25,332 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி உபகரணங்கள்

post image

1,075 அங்கன்வாடி மையங்களில் உள்ள 25,332 குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் வேலூா் மாவட்டத்தில் செயல்படும் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்லவும் ஆயத்தப் படுத்தப்படுகின்றனா்.

இந்த 1,075 அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயது வரையிலான 25,332 குழந்தைகள் முன்பருவ கல்வி திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனா். இவா்களுக்கு ஜூன் மாதம் கல்வி ஆண்டு தொடக்கத்தில் வயதுக்கேற்ப சீருடை, முன்பருவ கல்வி செயல்பாட்டுப் புத்தகம், ஆய்வு அட்டை மேலும் விளையாட்டுடன் கூடிய கல்விக்கு அங்கன்வாடி மையங்களில் முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தாராப்படவேடு அங்கன்வாடி மையத்தில் சீருடை, புத்தகம், ஆய்வு அட்டை ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், முதலாவது மண்டலக்குழுத்தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணி திட்ட அலுவலா் சாந்தி பிரியதா்ஷினி, காட்பாடி வட்டார குழந்தை வளா்ச்சி பணி திட்ட அலுவலா் சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க