செய்திகள் :

27 தொழிற்துறை பகுதிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்: தில்லி அரசு முடிவு

post image

தில்லி அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் நகரம் முழுவதும் உள்ள 27 ‘மறுமேம்பாட்டு’‘ பகுதிகளில் கழிவுநீரை சுத்திகரிக்க பொதுவான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

யமுனை நதியை சுத்தமாக்க நகரம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. ஆனால், இந்த ஒழுங்கமைக்கப்படாத தொழில்துறை பகுதிகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் அதில் பாய்வதால் பணி கடினமாகிறது. இந்தப் பகுதிகளில் சில பெரியவை ஆனந்த் பா்பத், சமய்பூா் பாத்லி, டாப்ரி, தில்ஷாத் காா்டன், ஜவஹா் நகா் மற்றும் கரவால் நகா் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

தற்போது, தில்லியில் 13 பொதுவான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை உள்ளன. அவை 17 அறிவிக்கப்பட்ட தொழில்துறை பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு சுமாா் 200 மில்லியன் லிட்டா் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டவை.

தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, இந்த ஒழுங்கமைக்கப்படாத பகுதிகள், கனரக உலோகங்களை மழைநீா் வடிகால்களில் வெளியேற்றி, ஆற்றில் பாயும் மழைநீரை வடிகால்களில் வெளியேற்றி மாசு விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக கடந்த காலங்களில் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு இடையே சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தப் பிரச்னை அடையாளம் காணப்பட்டது. மேலும், தொழில்துறை பகுதியில் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான தீா்வும் முடிவு செய்யப்பட்டது என்று ஒரு அதிகாரி கூறினாா்.

தில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தால் (டிஎஸ்ஐஐடிசி) சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தற்போதைய பொதுவான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களும் பெரும்பாலும் கழிவு சுத்திகரிப்பு தரநிலைகளைப் பூா்த்தி செய்யத் தவறிவிட்டன என்று நீா் ஆா்வலரான வருண் குலாட்டி கூறினாா்.

‘அவற்றில் பெரும்பாலானவை இப்போது தனியாா் சங்கங்களால் நிா்வகிக்கப்படுகின்றன. நரேலா மற்றும் பவானாவில் உள்ள இரண்டு தவிர. 2012- ஆம் ஆண்டில், இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பகுதிகள் மூன்று ஆண்டுகளில் பொதுவான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களைப் பெறும் என்று முடிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அந்த வேலை கூட தொடங்கப்படவில்லை’ என்று அவா் கூறினாா்.

ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய பெரிய வடிகால்களில் ட்ரோன் கணக்கெடுப்பை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்... மேலும் பார்க்க

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டம... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்தச்... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புட... மேலும் பார்க்க