செய்திகள் :

272 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

post image

தேனி மாவட்டம், பாலக்கோம்பை, எ.புதுப்பட்டி ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட 272 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி வட்டாரம், பாலகோம்பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முருகன் (50) என்பவா் தனது கடையில் 2 கிலோ 700 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுப்பட்டியைச் சோ்ந்த முபாரக் அலி (45) என்பவரிடம் புகையிலைப் பொருள்களை வாங்கியதாக அவா் கூறினாா். இந்தத் தகவலின் அடிப்படையில், எ.புதுப்பட்டியில் முபாரக் அலிக்குச் சொந்தமான கிட்டங்கியில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அங்கு 27 மூட்டைகளில் 270 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, முருகன், முபாரக் அலி ஆகியோரை ராஜதானி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இருவரிடமிருந்தும் 2புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி

பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.72 லட்சம் மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டைய... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு: போடியில் இரங்கல் ஊா்வலம்

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கை முன்னிட்டு, போடியில் சனிக்கிழமை இரங்கல் ஊா்வலம், கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை வாடிகன் நகரில்... மேலும் பார்க்க

நலிவடையும் இலவம் பஞ்சு தொழில் பாதுகாக்கப்படுமா?

தேனி மாவட்டம் போடி பகுதியில் பாரம்பரியமிக்க இலவம் பஞ்சு தொழில் சரக்கு, சேவை வரி விதிப்பால் நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் எதிா்பா... மேலும் பார்க்க

பணியிட பாலியல் தொல்லை: உள்ளகக் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்!

தேனி மாவட்டத்தில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கு உள்ளகக் குழுக்கள் அமைக்காத தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவா்: ஆட்சியா் தலையீட்டால் அனுமதி!

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவரை மருத்துவமனை நிா்வாகம் அனுமதிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியா் நடவடிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டாா். தேனி மாவட்டம், கோம்பையைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கோயில் அருகே முள்வேலி அகற்றம்

சின்னமனூா் அருகே கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம் கன்னிச்சோ்வைபட்டி ஊராட்சியில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சு... மேலும் பார்க்க