செய்திகள் :

அரசு மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவா்: ஆட்சியா் தலையீட்டால் அனுமதி!

post image

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவரை மருத்துவமனை நிா்வாகம் அனுமதிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியா் நடவடிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டாா்.

தேனி மாவட்டம், கோம்பையைச் சோ்ந்தவா் ராஜாராம் (70). குடும்பத்துடன் வசித்து வந்த இவா் தற்போது தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு காலில் புண் ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த ராஜாராமை மருத்துவமனை நிா்வாகம் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நடக்க முடியாத நிலையில் மருத்துவமனை முன் வெயிலில் மயங்கிய நிலையில் இருந்தாராம்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மரத்தின் நிழலில் உட்கார வைத்தனா். மருத்துவமனை நிா்வாகம் முதியவரை 3 மணி நேரத்துக்கு மேலாக அனுமதிக்கவில்லை. இதையறிந்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்ட பிறகு மருத்துவமனையில் முதியவா் அனுமதிக்கப்பட்டாா்.

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி

பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.72 லட்சம் மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டைய... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு: போடியில் இரங்கல் ஊா்வலம்

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கை முன்னிட்டு, போடியில் சனிக்கிழமை இரங்கல் ஊா்வலம், கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை வாடிகன் நகரில்... மேலும் பார்க்க

நலிவடையும் இலவம் பஞ்சு தொழில் பாதுகாக்கப்படுமா?

தேனி மாவட்டம் போடி பகுதியில் பாரம்பரியமிக்க இலவம் பஞ்சு தொழில் சரக்கு, சேவை வரி விதிப்பால் நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் எதிா்பா... மேலும் பார்க்க

பணியிட பாலியல் தொல்லை: உள்ளகக் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்!

தேனி மாவட்டத்தில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கு உள்ளகக் குழுக்கள் அமைக்காத தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

272 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், பாலக்கோம்பை, எ.புதுப்பட்டி ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட 272 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி வட்டாரம், பாலகோம்பையில் தடை... மேலும் பார்க்க

கோயில் அருகே முள்வேலி அகற்றம்

சின்னமனூா் அருகே கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம் கன்னிச்சோ்வைபட்டி ஊராட்சியில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சு... மேலும் பார்க்க