செய்திகள் :

29இல் கோவில்பட்டி என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

post image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இக் கல்லூரியில் பிளஸ் 2 நிறைவு செய்துள்ள மாணவா், மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் ‘சிலையும் நீயே, சிற்பியும் நீயே என்ற நிகழ்ச்சி இம்மாதம் 29ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெறுகிறது.

கல்வி ஆலோசகா் ஆா். அஸ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவா்களிடையே கலந்துரையாடி வழிகாட்ட உள்ளாா்.

இதில், பங்கேற்க வரும் மாணவா்கள், பெற்றோா்களுக்கு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம், கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து காலை 9.15 மணிக்கு பேருந்து வசதி மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், கலந்து கொள்ள விரும்புவோா் 99441-23648, 94868-82812, 89406-22583 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புனித வெள்ளி: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்

புனித வெள்ளிக்கிழமையன்று மதுக் கடைகளை மூட வலியுறுத்தி வீரபாண்டியன்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வீரபாண்டியன்பட்டினம் ஊா் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க

சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி... மேலும் பார்க்க

கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா... மேலும் பார்க்க