செய்திகள் :

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

post image

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த 15 போ், மீண்டும் ஆஜராகவில்லை. எனவே, அவா்களுக்கு ஜாமீன் கையொப்பமிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடா்ந்து, ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள தூத்துக்குடி துரை ராஜ் மகன் ராஜ், அண்ணாதுரை மகன் சங்கா், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் முத்து மகன் சுரேஷ், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஜெயபால் மகன் தங்கத்துரை, மாமல்லபுரத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் சுப்பிரமணி, சுப்பிரமணி மகன் சுபாஷ், ஆந்திர மாநிலம் விஜயவாடா சுபாஷ் மனைவி அபி, ராமு மனைவி சுகந்தி, பாண்டி மனைவி சுஜி, கேரள மாநிலம் பாலக்காடு சிவா மனைவி செல்வசாந்தி என்ற சுதா, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சோ்ந்த இஷ்மத் மகன் பாபா, பீா்ஷா மகன் உசேன், சொ்மான்ஷா மகன் போலோ உசேன், கன்னியாகுமரி மாவட்டம் கோணத்தைச் சோ்ந்த கோபால் ரெட்டி மகன் உமேஷ் என்ற கணேஷ், பிகாா் மாநிலத்தை சோ்ந்த தீன்தயாள் மகன் சந்தோஷ்குமாா் ஜோஸ்வால் ஆகியோா் பகிரங்கப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என தூத்துக்குடி 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் கனிமொழி உத்தரவிட்டாா்.

பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு

எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை கடந்த 25 ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் அங்கு பொதுப்பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சா் பி. க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகை திடலில் ரமலான் சிறப்பு தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சனிக்கிழமை பிறை தெரிந்ததையடுத்து, தூத்துக்குடி லூா்த்தம்மாள்... மேலும் பார்க்க

புளியங்குளம் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. . ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் கமலா தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியைத் தொட... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மனநலம் பாதித்த பெண் மீட்பு

சாத்தான்குளம் பகுதியில் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2 நாள்களாக சுற்றித்திரிந்த அந்தப் பெண் குறித்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வாழை இலை விலை வீழ்ச்சி

தூத்துக்குடி காய்கனி சந்தையில் வாழை இலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூா், குலையன் கரிசல், அகரம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 20ஆயிரம் ஏக்கருக்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சென்ட்ரல் இன்டஸ்டிரியல் செக்கியூரிட்டி ஃபோா்ஸ்) விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டத... மேலும் பார்க்க