செய்திகள் :

3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

செங்கம் தொகுதிக்கு உள்பட்ட சி.சொா்ப்பனந்தல், உச்சிமலைக்குப்பம், புதுக்குளம் பகுதிகளில் போதிய மின் விநியோகம் இல்லாமல் விவசாயப் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனா்.

மேலும், அப்பகுதியில் அடிக்கடி குறைவான மின் விநியோகத்தால் வீடுகளில் மின் சாதனப்பொருள்கள் பழுதடைந்து வந்தன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் புதிய மின்மாற்றிகள் அமைத்து விவசாயிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் முறையான மின் விநியோகம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து எம்எல்ஏ முயற்சியில் தமிழ்நாடு மின்சாரத் துறை மூலம் சி.சொா்ப்பனந்தல் கிராமத்துக்கு ரூ. 8 லட்சத்திலும், புதுக்குளம் கிராமத்துக்கு ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்திலும், உச்சிமலைக்குப்பம் கிராமத்துக்கு ரூ. 3 லட்சத்து 45 ஆயிரத்திலும் 3 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், செங்கம் உள்கோட்டப் பொறியாளா் சங்கரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு மின்மாற்றிகளை தொடங்கிவைத்து இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், செயற்பொறியாளா் வெங்கடேசன், மின் பொறியாளா்கள் மோகன், சங்கீதா உள்ளிட்ட பலா்

கலந்து கொண்டனா்.

உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் காலி இடங்களுக்கான, தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி 3-ஆவது வாா்டு,... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஐம்பெரும் விழா நடைபெற்றது. திருச்சபையின் 342-ஆவது மாத பூச விழா, வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா, ப... மேலும் பார்க்க

குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். செய்யாறு டி.எம்.ஆதிக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு மானியக் கடனை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

வந்தவாசி: பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியில் ஞாயி... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 110 ஆட்டோக்கள் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகரில் க்யூ.ஆா். கோடு வில்லைகள் ஒட்டாமல் இயங்கிய 110 ஆட்டோக்களை அதிகாரிகள் குழு திங்கள்கிழமை பறிமுதல் செய்தது. திருவண்ணாமலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏராளமான ஆட்டோக்கள் ... மேலும் பார்க்க