செய்திகள் :

3 நாள்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை! - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; இருவர் கைது!

post image

தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று இரவு இளைஞர் ஒருவருடன் 14 வயது சிறுமி ஒருவர் அழுது கொண்டு, நின்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த அப்பகுதியில் நின்றவர்கள் சிறுமி ஏதோ பிரச்னையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து ரோந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் சிறுமியிடமும், அந்த இளைஞரிடமும் விசாரித்துள்ளனர். இதில் அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து உடனே, ரோந்து போலீஸார் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியையும், அந்த இளைஞரையும் ஒப்படைத்தனர்.

சிறுமி பாலியல் வழக்கு

இதைத் தொடர்ந்து மேலும் விசாரணை செய்ததில் அந்த சிறுமி சென்னையில், மாயமானவர் என்பது தெரியவந்ததுடன் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம், சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(24) கூலித் தொழிலாளி. இவர் சென்னையில் வேலை பார்த்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த இந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதீஸ்வரன், சென்னையிலிருந்து தனது ஊருக்கு வந்துவிட்டார். இந்த நிலையில், சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்த போது, தஞ்சாவூருக்கு வர சொல்லியுள்ளார். காதலன் அழைத்த நம்பிக்கையில் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, கடந்த 13ம் தேதி, சிறுமி தஞ்சாவூருக்கு வந்து ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை கட் செய்து விட்டார்.

போக்சோ வழக்கு

நேரம் போனதே தவிர ஜெகதீஸ்வரன் மீண்டும் காதலியான சிறுமியை தொடர்பு கொள்ளவில்லை. சிறுமி போன் செய்தும் எடுக்கவில்லை. புது ஊரு நம்பி வந்த காதலன் இப்படி செய்திட்டாரே என அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அழுது கொண்டு நின்றுள்ளார். அங்கு நின்ற, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் புவனேஸ்வரன் (30) சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமியும் புவனேஸ்வரனிடம், நடந்ததை கூறி அழுதுள்ளார்.

எதுக்கும் கவலை படாதே, உன்னை காதலனுடன் சேர்ந்து வைப்பது என் பொறுப்பு என்று நம்பிக்கையாக பேசி நம்ப வைத்திருக்கிறார். அதன் பின்னர், புவனேஸ்வரன் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். அவருடைய மனைவி வீட்டில் இல்லாததால், திட்டம் போட்டு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தொடர்ந்து மூன்று நாள்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் வதை செய்திருக்கிறார். பிறகு, சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த போது, போலீஸில் சிக்கி விட்டார்.

இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும், சிறுமியை காதலித்து வர வைத்து ஏமாற்றிய ஜெகதீஸ்வரனையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்து வர வைத்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப... மேலும் பார்க்க

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க