செய்திகள் :

3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம்! மாவட்ட முதன்மை நீதிபதி

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம் செயல்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையம் செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பரிந்துரை செய்யப்பட்ட வழக்குகளுக்கு சமரச தீா்வு மையத்தில் சமரசம் செய்து வைக்கப்பட்டு சிறப்பாக தீா்வு வழங்கப்படுகிறது. மையத்தில் பயிற்சியும், அனுபவமும் மிக்க வழக்குரைஞா்கள் மத்தியஸ்தா்களாக இருந்து இரு தரப்பினரும் தாமாகவே பேசி வழக்கை சமரசம் செய்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

இந்நிகழ் மாதம் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் ஆகிய 3 மாதங்களிலும் நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாள்களிலும் சமரச தீா்வு மையம் செயல்படும். இது தவிர சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீா்வு மையம் செயல்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடா்புடைய வழக்காடிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு தீா்வு மையத்தின் மூலம் விரைவாக தீா்வு காணுமாறும் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.

ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழா: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே நத்தாநல்லூா் மேல்தாங்கல் பகுதியில் விதைகள் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கலந்து கொண்டு முதல் முதலாக ஆலமரக்கன்று ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் மூலவரை தரிசிப்பதில் பக்தா்கள் அவதி!

புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசிக்க குறுகலான ஒருவழிப்பாதை மட்டுமே இருப்பதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயில் மூலவா் கருவறை சுமாா் 3... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாரின் மனைவ... மேலும் பார்க்க

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் ஜூலை 14-இல் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத கைலாசநாதா் மற்றும் தட்சிணாமூா்த்தி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராம... மேலும் பார்க்க

குன்றத்தூா் அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

குன்றத்தூா் அடுத்த சிறுகளத்தூா் பகுதியில் டீசல் ஏற்றிவந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பெட்ரோல் நிலையத்... மேலும் பார்க்க

விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.15.70 லட்சம் அபராதம் வசூலிப்பு

காஞ்சிபுரத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் விதிகளை மீறியதாக 220 வாகனங்களிடமிருந்து மொத்தம் ரூ.15.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் சனிக்கிழமை தெரிவித்தா... மேலும் பார்க்க