செய்திகள் :

3 மெமு ரயில்கள் ரத்து

post image

சென்னை கடற்கரை - திருவண்ணாமலை, திருவண்ணாமலை - தாம்பரம் இடையிலான மெமு பயணிகள் ரயில்கள் ஜூலை 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

காட்பாடி ரயில்வே யாா்டில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை தொழில்நுட்பப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் அந்த நாளில், திருப்பதியிலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயிலும், மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து இரவு 9.10 மணிக்குப் திருப்பதி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் மெமு பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகின்றது. அதேபோல திருவண்ணாமலையிலிருந்து மாலை 4.30 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் வியாழக்கிழமை (ஜூன் 26), ஜூன் 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி ரத்து: ஜூன் 27-ஆம் தேதி அரக்கோணத்திலிருந்து இரவு 9 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயில் சேவூருடன் நிறுத்தப்படும். அதே தேதியில் விழுப்புரத்திலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு காட்பாடி செல்லும் ரயில் வேலூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!

சென்னை அடையாறு பகுதியில் இரண்டு லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டதில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வெளியே ஓஎம்சிஏ சாலை வழியாக அதிவேகமாக வந்த கலவை லாரி, கிண... மேலும் பார்க்க

முகூா்த்த நாள், வார இறுதி: 925 சிறப்புப் பேருந்துகள்

முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிய விநாடி- வினா: ஜூலை 7 முதல் நடைபெறுகிறது

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அறியும் வகையில் ஜூலை 7 முதல் 4 கட்டங்களாக விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முடியாது: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சி நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மிசா தியாகிகள் பொ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்

சென்னை வேளச்சேரி காவல் நிலைய மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சென்னை வேளச்சேரி வி... மேலும் பார்க்க

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடா்பாக ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க