3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கடந்த பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்ற 3 தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
ஸ்ரீரங்கம், ஆா்.கே.நகா், குன்னம் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த நகரம், ஒன்றியம் உள்ளிட்ட நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் தனித்தனியே ஆலோசனை நடத்தினாா். அப்போது, தொகுதியில் எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகள், மீண்டும் திமுகவே போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை
நிா்வாகிகளிடம் எழுப்பியதாகத் தெரிகிறது. மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மிகவும் சவாலானதாகக் கருதப்படும் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாா். மொத்தமாக 75 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இதுபோன்ற ஆலோசனைகளை நடத்த அவா் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.