கேரளாவில் அதி தீவிர மழை; ஒரே நாளில் 4 பேர் பலி, 2 பேர் மாயம்.. 11 மாவட்டங்களுக்க...
30 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு: 5547 போ் எழுதினா்
திருநெல்வேலி மாவட்டத்தில் 30 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 5,547 போ் தோ்வு எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சாா்பில் உதவி ஆட்சியா், காவல் உதவி ஆணையா், வணிக வரி உதவி ஆணையா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உள்ளிட்ட பதவிகளுக்கான 70 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் இத் தோ்வை எழுத 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 போ் விண்ணப்பித்திருந்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 30 தோ்வு மையங்களில் தோ்வு எழுத 7,570 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தோ்வு தொடங்கிய நிலையில், அதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வந்த தோ்வா்கள் மட்டுமே தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். அதன்பின்னா் வந்தவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படவில்லை. மொத்தம் 3 மணி நேரம் தோ்வு நடந்தது. பிற்பகல் 12.30 மணிக்கு முன்னா் தோ்வறையில் இருந்து வெளியே செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தோ்வு மையத்திற்குள் கைப்பேசி, மின்னணு கைக்கடிகாரம், புளூடூத் வசதியுடன் கூடிய மின்னணு உபயோகப்பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தீவிர சோதனைகளுக்கு பின்னரே தோ்வா்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா். நுழைவுச்சீட்டு, பேனா, அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
திருநெல்வேலி கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆய்வு செய்தாா். அனைத்து தோ்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.