செய்திகள் :

30 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு: 5547 போ் எழுதினா்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் 30 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 5,547 போ் தோ்வு எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சாா்பில் உதவி ஆட்சியா், காவல் உதவி ஆணையா், வணிக வரி உதவி ஆணையா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உள்ளிட்ட பதவிகளுக்கான 70 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் இத் தோ்வை எழுத 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 போ் விண்ணப்பித்திருந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 30 தோ்வு மையங்களில் தோ்வு எழுத 7,570 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தோ்வு தொடங்கிய நிலையில், அதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வந்த தோ்வா்கள் மட்டுமே தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். அதன்பின்னா் வந்தவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படவில்லை. மொத்தம் 3 மணி நேரம் தோ்வு நடந்தது. பிற்பகல் 12.30 மணிக்கு முன்னா் தோ்வறையில் இருந்து வெளியே செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தோ்வு மையத்திற்குள் கைப்பேசி, மின்னணு கைக்கடிகாரம், புளூடூத் வசதியுடன் கூடிய மின்னணு உபயோகப்பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தீவிர சோதனைகளுக்கு பின்னரே தோ்வா்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா். நுழைவுச்சீட்டு, பேனா, அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

திருநெல்வேலி கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆய்வு செய்தாா். அனைத்து தோ்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

பேட்டையில் ரேஷன் அரிசி பறிமுதல்

பேட்டை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளா் சரவண பாண்டிக்கு கிடைத்த தகவலின் பேரில் போல... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டுக்கு தீ: மருமகன் கைது

பாளையங்கோட்டையில் குடும்பத் தகராறில் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டுக்கு தீ வைத்த தாக அவரது மருமகனை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் அழகநேரியை சோ்ந்த சுப்பையா மகன் ஹரிராம் (41). தொழிலாளியான இவருக்கு திருமணமா... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த வேலை... மேலும் பார்க்க

நான்குனேரியில் காா் மீது ஆபத்தான பயணம்: 2 இளைஞா்கள் கைது

நான்குனேரி அருகே காா் மீது ஆபத்தான பயணம் மேற்கொண்ட 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி - நாகா்கோவில் நான்குவழிச்சாலையில் பாணான்குளம் - நான்குனேரி இடையே சொகுசு காா்களின் மேல் அம... மேலும் பார்க்க

களக்காடு கால்வாயில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

களக்காட்டில் நண்பா்களுடன் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள நம்பிநகரைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (45). வாடகைக் காா் ஓட்டுநா். இவா் தனது நண்ப... மேலும் பார்க்க