செய்திகள் :

'35 சவரன் நகைகளை இரவல் கொடுத்து இழந்த பெண்' - கணவன் கேட்டதால் தீக்குளித்த அதிர்ச்சி

post image

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள செண்பகத்தறை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். வெளிநாட்டில் வேலை செய்துவந்தார். இவருக்கும் ஊற்றுக்குழி பகுதியை சேர்ந்த ஶ்ரீஜா(37) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும்  11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். வடிவேல் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணத்தை தனது மனைவிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். மேலும், சுமார் 35 சவரன் தங்க நகைகளும் மனைவிக்கு வாங்கி கொடுத்துள்ளார் வடிவேல்.

உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதற்க்காக வடிவேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். திருமணத்துக்கு செல்வதற்காக நகைகளை எடுத்து தயாராக வைக்கும்படி மனைவி ஸ்ரீஜாவிடம் நேற்று முன்தினம் இரவு வடிவேல் கூறியுள்ளார். அப்போது நகைகள் ஒன்றும் தன்னிடம் இல்லை எனவும், தனது சகோதரனுக்கு இரவலாகக் கொடுத்தாகவும் கூறியுள்ளார் ஸ்ரீஜா.

இதனால் தம்பியிடம் கொடுத்த நகைகளை வாங்கி வைக்கும்படி வடிவேல் கூறியுள்ளார். காலையில் தம்பி நகைகளை கொண்டு வந்து தருவதாக கூறி உள்ளதாக ஸ்ரீஜா கணவரிடம் தெரிவித்தார். இதைனையடுத்து இருவரும் இரவு தூங்கி உள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட ஸ்ரீஜா

நேற்று அதிகாலை கணவன் மற்றும் பிள்ளைகள் கண் விழிப்பதற்கு முன்பே எழுந்த ஶ்ரீஜா வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் அலறித்துடித்தார் ஸ்ரீஜா. ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவன் மற்றும் குழந்தைகள் வெளியே ஓடி சென்று தீயை அணைத்தனர். அதற்குள் உடல் முழுவதும் கருகி சுருண்டு விழுந்து இறந்துள்ளார் ஸ்ரீஜா. இது குறித்து வடிவேலு நித்திரவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்து போலீஸார் அங்கு சென்று ஶ்ரீஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் விசாரணை

நித்திரவிளை காவல்நிலையம்

மேலும் இது சம்பந்தமாக போலீஸார் ஸ்ரீஜாவின் சகோதரரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தனக்கு 50,000 ரூபாய் பணம் மட்டுமே கடனாக கொடுத்ததாகவும், நகைகள் எதுவும் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீஜா நகைகளை வேறுயாருக்கேனும் கடனாக கொடுத்ததில் அவர்கள் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றினார்களா அல்லது வேறு எங்காவது முதலீடு செய்து நகைகளை இழந்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவத்திற்குக் காரணமான புகாரை அளித்த நிகிதா மீது கூறப்படும் மோசடி... மேலும் பார்க்க

நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் காமாட்சி. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.பணியை முடித்துக் கொண்டு நள்ளிரவ... மேலும் பார்க்க

'நான் தான் நீலகிரி கலெக்டர்'-போட்டோவோடு பலருக்கும் சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்... அதிர்ச்சி பின்னணி!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கை... மேலும் பார்க்க

விடுதி வளாகத்தில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி... சிவகங்கையில் சோகம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகள் பிருந்தா. இவர் காளையார்கோயில் அருகே ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித பெனடிக் பெண்கள் விடுதியில் தங்கி சகாயராணி பெண்கள் மேல்நிலைப... மேலும் பார்க்க

மும்பை: பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை; ஆசிரியைக் கைது; விசாரணையில் பகீர் தகவல்கள்

மும்பையில் உள்ள பிரபலமான ஆங்கில மீடிய பள்ளியில் 40 வயது ஆசிரியை ஆங்கிலம் கற்பித்து வந்தார். இதே பள்ளியில் 11 வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனைக் கட்டாயப்படுத்தி நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்ற... மேலும் பார்க்க

அஜித்குமார் : `ஐஏஎஸ் உறவினரும் இல்லை; எந்த செல்வாக்கும் இல்லை; நாங்களே..!' - புகார் கொடுத்த நிகிதா

’’எங்கள் நகையைக் காணவில்லை என்றுதான் புகார் கொடுத்தேன். காவலாளி அஜித்குமார் இறந்துவிட்டார் என போலீஸ் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். இந்தப் பாவத்தை நாங்கள் எப்படி சுமப்போம் என்று நானும் அம்மாவும் ... மேலும் பார்க்க