செய்திகள் :

4 கிலோ போதைப் பொருள்களை பதுக்கியவா் கைது

post image

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 4 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தில், போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கீழக்கணவாய் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த ராஜூ மகன் ரெங்கசாமி (51) என்பவா், தனது மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூலீப் உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரெங்கசாமியை கைது செய்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல்துறையினா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ரெங்கசாமி சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164- ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூரில் கடந்த சில நாள்களாக நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வெ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் கைது

பெரம்பலூா் அருகே அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த நடேசன் மகன் ரத்தினம் (60). கழைக்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே மளிகைக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை குன்னம் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல்நில... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க