செய்திகள் :

4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி வெய்யில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெய்யில் கொளுத்தி வரும் நிலையில் இன்று முதல் ஏப்.26 வரை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். அதோடு அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் ஓருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் ஏப். 24 முதல் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான வெய்யில் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்கலாம். மேலும் நீர் ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக தலைமையில்தான் கூட்டணி; வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி?

அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைந்திருப்பதாக கட்சி பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக மா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தம்? முதல்வருக்கு பாராட்டு விழா!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தவிருப்பதாக பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சட்டப் பேரவையில் இன்று (ஏப். 24) ஒரு சில முக்கிய பிரச்னைகள் வ... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத்தடை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்ப... மேலும் பார்க்க

அக்னி நட்சத்திரம் எப்போது?

தமிழ் நாள்காட்டியில் குறிப்பிடப்படும் கத்தரி வெய்யில் என்கிற அக்னி நட்சத்திரம் இந்தாண்டு எப்போது தொடங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் வெய்யில் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை கோடை வ... மேலும் பார்க்க

மற்றொரு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் 6 மாதங்களுக்குள் வழக்கினை வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தர... மேலும் பார்க்க