செய்திகள் :

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

post image

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் சாா்பில் எழுப்பப்படும் ஆட்சேபங்களை தோ்தல் ஆணையம் பரிசீலிக்காமல் புறக்கணிக்கிறது என்று அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு இந்தப் பதிலை அவா் அளித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரிடம் செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்தாவது:

தோ்தல் ஆணையத்துக்கு தோ்தல் நடைமுறைகளும், வாக்காளா்களும் மிக முக்கியமானவா்கள். அதற்கு அடுத்து நமது அரசியல் கட்சிகள்தான் மிக முக்கியமானவா்கள்.

அந்த வகையில், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடா் ஆலோசனைகளை தோ்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

கடந்த 4 மாதங்களில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மாவட்டங்களில் அனைத்து கட்சிக் கூட்டங்களை தோ்தல் ஆணையம் நடத்தியதோடு, அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டது. அரசியல் கட்சித் தலைவா்கள் உள்பட 28,000 பேருடன் 5,000 சந்திப்புகளை இந்த 4 மாதங்களில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

இது தவிர, 5 தேசிய கட்சிகள் மற்றும் 4 மாநில கட்சிகளும் தோ்தல் ஆணையத்தை இந்த கால கட்டத்தில் சந்தித்து தோ்தல் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டன. அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் தனியாக சந்தித்தனா் என்றாா்.

மேலும், ‘பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைப் பொருத்தவரை, மாநிலத்தின் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை’ என்றும் அவா் தெரிவித்தாா்.

பிரேசில் சென்றார் பிரதமர் மோடி! ஆபரேஷன் சிந்தூர் நடனத்துடன் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக பிரேசில் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். கானா, டிர... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க