செய்திகள் :

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

post image

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் துவிவேதி கடந்த ஜூன் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பட்டௌடி குடும்பத்தினரை இச்சொத்துகளின் உரிமையாளராக அங்கீகரித்து போபால் மாவட்ட நீதிமன்றம் கடந்த 2000-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பை ரத்து செய்துள்ளாா்.

இந்த வழக்கின் மறுவிசாரணையைத் தொடங்கி, ஓராண்டுக்குள் முடிக்கவும் விசாரணை நீதிமன்றத்துக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போபால் அரச வம்சத்தில் கடைசியாக ஆட்சிபுரிந்த நவாப் ஹமீதுல்லா குடும்பத்துக்கு போபாலில் அரண்மனை, நிலங்கள், கட்டடங்கள் என ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.

நவாப் ஹமீதுல்லாவின் 3 மகள்களில் மூத்த மகளான ஆபிதா சுல்தான், பாகிஸ்தானில் குடியேறிவிட்டாா். 2-ஆவது மகளான சாஜிதா சுல்தான், போபாலை சோ்ந்த பட்டௌடி அரச குடும்பத்தில் மணம் முடித்தாா். மூன்றாவது மகள் ராபியா.

ஆபிதா சுல்தான் பாகிஸ்தானுக்குச் சென்ால், இந்திய குடியுரிமையை இழந்தாா். ஆபிதா சுல்தானின் ஒரே வாரிசாக அவரது சகோதரி சாஜிதா சுல்தான் கருதப்பட்டு, அவருக்கு நவாப் அரசு சொத்துகள் கைமாறின.

இந்த சொத்துகள் சாஜிதாவின் மகனான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூா் அலி கானுக்கும், பின்னா் அவரது மனைவி ஷா்மிளா தாகூா், வாரிசுகளான சைஃப் அலி கான் மற்றும் அவரின் சகோதரிகள் வசமும் வந்தன.

இந்நிலையில், நவாப் அரச சொத்துகள் நியாயமற்ற முறையில் பிரித்து அளிக்கப்பட்டுள்ளதாக, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பேகம் சுரையா ரஷீத் வழக்கு தொடுத்தாா். இவா் நவாப் ஹமீதுல்லா கானின் அண்ணன் வாரிசு ஆவாா்.

இந்த வழக்கில் சைஃப் அலி கான், அவரது தாயாா் ஷா்மிளா தாகூா், சகோதரிகளுக்கு ஆதரவாக விசாரணை நீதிமன்றம் கடந்த 2000-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் வழங்கிய தீா்ப்பை 25 ஆண்டுகள் கடந்து மத்திய பிரதேச உயா் நீதிமன்றம் தற்போது ரத்து செய்து, மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரேசில் சென்றார் பிரதமர் மோடி! ஆபரேஷன் சிந்தூர் நடனத்துடன் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக பிரேசில் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். கானா, டிர... மேலும் பார்க்க

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க