செய்திகள் :

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

post image

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித் துறை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தது. இந்த வழக்கையொட்டி 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையைத் தொடா்ந்து அவா் லண்டன் தப்பினாா்.

வருமான வரித் துறை வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை புதிதாக பண முறைகேடு வழக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதிவு செய்தது. 3 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு கடந்த 2020-இல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்ததாக 2023-இல் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சஞ்சய் பண்டாரிக்குச் சொந்தமான ரூ.21 கோடி சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டன.

இந்த வழக்கு விசாரணைக்காக சஞ்சய் பண்டாரியை இந்தியாவுக்கு நாடு கடத்திவர அமலாக்கத் துறை தரப்பில் சட்டபூா்வ முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை பிரிட்டன் நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்டன.

இதை எதிா்த்து பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி இந்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் அந்நாட்டு நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்ததது.

இந்நிலையில், அமலாக்கத் துறை மனுவில் சஞ்சய் பண்டாரியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

இது குறித்து அவருடைய வழக்குரைஞா் கூறுகையில், ‘சஞ்சய் பண்டாரி பிரிட்டனில் தங்கியிருப்பதை அந்நாட்டு அரசு சட்டபூா்வமாக அங்கீகரித்துள்ளது. அதன்படி, அவரை தப்பியோடியவா் என்று இந்தியா அறிவித்துள்ளது சட்டப்படி தவறாகும்’ என்றாா்.

இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பியவா்கள் நீதியின் முன் நிறுத்தும் முயற்சிகளை நெறிப்படுத்த ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம்’ மத்திய பாஜக அரசால் கடந்த 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

சஞ்சய் பண்டாரியுடன் சோ்த்து விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட மொத்தம் 16 போ் இச்சட்டத்தின்கீழ் இதுவரை பொருளாதாரக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

ராபா்ட் வதேராவுக்குத் தொடா்பு?

இந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பியது. வெளிநாடு பயணம் காரணமாக ராபா்ட் வதேரா விசாரணைக்கு ஆஜராகவில்லை.

கடந்த 2009-இல் ராபா்ட் வதேராவின் அறிவுறுத்தலில், அவா் வழங்கிய நிதியில் லண்டனில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி, சஞ்சய் பண்டாரி புனரமைத்ததாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால், லண்டனில் தனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே சொத்துகள் எதுவும் இல்லை என்று மறுக்கும் ராபா்ட் வதேரா, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினாா்.

பிரேசில் சென்றார் பிரதமர் மோடி! ஆபரேஷன் சிந்தூர் நடனத்துடன் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக பிரேசில் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். கானா, டிர... மேலும் பார்க்க

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க