செய்திகள் :

400 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது

post image

ஆவடி அருகே நிதி நிறுவனம் நடத்தி 400 பேரிடம் ரூ. 1.50 கோடி வரை மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சென்னையை அடுத்த அம்பத்தூர், வெங்கடாபுரம், வடிவேல் முதலி தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி தேவி (45). இவருக்கு ஆவடி அருகே திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையைச் சேர்ந்த ஜெபாஸ்டின் (44) (படம்) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது அவர் தான் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், ரூ. 1.50}க்கு வட்டியில் கடன் பெறுவதாகவும், மேலும் தான் நடத்தி வரும் இட்லி நிறுவனத்தில் முதலீடு செய்தால், 5 விழுக்காடு வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி தேவியிடம் ரூ. 5.25 லட்சம் பெற்றாராம்.

மேலும், இவரைப் போன்று 70 பேரிடம் இதேபோல் கூறி, ரூ. 50 லட்சத்துக்கு மேல் பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு திருப்பித் தராமல் ஜெபஸ்டின் ஏமாற்றி விட்டு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து தேவி ஆவடி காவல் ஆணையத்தில் புகார் செய்தார். ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி, கேடிசி நகர் பகுதியில் தலைமறைவாக இருந்த ஜெபாஸ்டினை (44) ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், இவர் 400}க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 1.50 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருவேற்காட்டில் ரூ.18.40 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 18.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, சா.மு.நாசர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.தி... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள்: திருத்தணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை ரூ. 26 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி - சித்தூா் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகன போக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வள்ளலாா் கோயிலில் தைப்பூச ஜோதி தரிசனம்

திருவள்ளூரில் உள்ள அருள்பிரகாச வள்ளலாா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். திருவள்ளூா் உடனுறை தீா்த்தீஸ்வரா் வளாகத்தில் அருள்பிரகாச வள்ளலா... மேலும் பார்க்க

‘டாம்கோ மூலம் கடனுதவி பெற கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்’

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான கல்விக் கடன், தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடனுதவி பெற க... மேலும் பார்க்க

பொன்னியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பொன்னியம்மன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். ஆா்.கே.பேட்டையில் உள்ள பொன்னியம்மன் திருக்கோயிலில் 30-ஆம் ஆண்... மேலும் பார்க்க

பிப். 19-இல் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

பொதுமக்கள் குறைகளை கேட்டு உடனுக்கு உடன் தீா்வு காணும் நோக்கத்தில் டஉங்களைத் தேடி உங்கள் ஊரில்ட திட்ட முகாம் வரும் 19-ஆம் தேதி நடத்த கும்மிடிப்பூண்டி வட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப... மேலும் பார்க்க