புதிய படத்தை தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக தானே தயாரித்து படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கடுத்து வை ராஜா வை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
கடைசியாக, ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியானது. மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் இன்னும் எந்த ஒரு ஓடிடியிலும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 15 கோடி பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!
இந்த நிலையில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக இளம் நடிகர்களை வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை அவரே தயாரித்து இயக்க முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.