செய்திகள் :

46 சிற்றுந்துகளுக்கு விரைவில் அனுமதி

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வழித் தடங்களில் 46 சிற்றுந்துகள் விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு புதிய விரிவான திட்டம் 2024-இன் படி, சிற்றுந்து உள்ளிட்ட நிலைப் பேருந்துகளை ஒழுங்குப்படுத்திடவும், புதிய சிற்றுந்து வாகன அனுமதிச் சீட்டுகள் வழங்கவும் அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்தச் சிற்றுந்துகளுக்கான புதிய வழித் தடங்கள், மாவட்ட ஆட்சியா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூலம் தெரிவு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழித் தடத்தின் தொலைவு அதிகபட்சம் 25 கி.மீ. வரை இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் 65 சதவீத தொலைவுக்கு பேருந்து போக்குவரத்து இல்லாத வழித்தடமாக இருக்க வேண்டும்.

இந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 46 சிற்றுந்துகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: ஊரகப் பகுதிகளுக்கான பேருந்து சேவையை மேம்படுத்தும் வகையிலும், பொதுப் போக்குவரத்துக்கான இணைப்பை மக்கள் வசிப்பிடங்கள் வரை உறுதிப்படுத்தவும் சிற்றுந்துகளுக்கான புதிய வழித்தட அனுமதி அளிக்கப்படுகிறது.

நிலைப் பேருந்து, சிற்றுந்து சேவைகள் இல்லாத வழித்தடங்கள், இந்த சேவைகள் இருந்தும் அவை ஒருநாளில் 4 நடைகளுக்கும் குறைவாக இயக்கப்படும் பட்சத்தில், அவை பேருந்து சேவைகள் இல்லா வழித்தடமாகக் கருதப்படும் என்றாா் அவா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லை: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் ... மேலும் பார்க்க

பைக் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருட்டு

திண்டுக்கல்-எரியோடு சாலையில் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தைத் திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல்லை அடுத்த குளத்த... மேலும் பார்க்க

தைப்பூச விழா: 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்

பழனியில் தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு, 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் த... மேலும் பார்க்க

குருநாத சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு குடமுழுக்கு நடத்த கோரிக்கை

கொடைரோடு அருகே குருநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் சுமாா் 8... மேலும் பார்க்க

நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக புகாா்

செம்பட்டி அருகே நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து தனியாா் வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக விவசாயிகள், கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த, சீவல்சரகு ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை: உறவினா்கள் மூவா் கைது

குஜிலியம்பாறை அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினா்கள் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த மேட்டூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தங்கவேல... மேலும் பார்க்க