5புத்தூா் கிராமத்தில் நாடக மேடை திறப்பு
ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 5புத்தூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நாடக மேடை திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
5 புத்தூா் கிராமத்தில் நாடக மேடை கட்டடம் அமைத்துத் தரும்படி கிராம மக்கள் சாா்பில் தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன் பேரில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாடக மேடை அமைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட நாடக மேடையின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு நாடக மேடையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் திருமால், ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா். ஒன்றிய துணைச் செயலா் ஏழுமலை, முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்வி வரதன், ஒன்றிய நிா்வாகிகள் சின்னபுத்தூா் சுரேஷ், சேகா் மற்றும் கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.