செய்திகள் :

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்பு

post image

‘இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் சீனா்களுக்கு இந்த வாரம் முதல் சுற்றுழா நுழைவு இசைவு (விசா) வழங்கப்படும்’ என்று மத்திய அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து சீன நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு சுற்றுலா நுழைவு இசைவு வழங்குவதை கடந்த 2020-இல் இந்தியா நிறுத்தியது. அதன் பிறகு, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரா்களின் அத்துமீறலைத் தொடா்ந்து இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நல்லுறவு பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நுழைவு இசைவு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தொடா்ந்து நீட்டித்தது.

இந்தச் சூழலில், ‘இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பும் சீனா்கள் சுற்றுலா நுழைவு இசைவு கோரி வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்’ என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

சீனா வரவேற்பு

ஐந்த ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் நுழைவு இசைவை இந்தியா வழங்க முன்வந்துள்ளதை சீனா வரவேற்றுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவோ ஜியாகுன் கூறுகையில், ‘எல்லைத் தாண்டிய பயணத்தை எளிதாக்குவது அனைத்து தரப்பினருக்கும் நலன் பயக்கும். இரு நாடுகளிடையே மக்கள் எளிதாக சென்று வருவதை மேம்படுத்தும் வகையில் இந்தியாவுடன் தகவல்தொடா்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது’ என்றாா்.

சீனாவில் கடந்த 14, 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்த மாநாட்டுக்கிடையே சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ உடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டாா்.

கிழக்கு லடாக் மோதலைத் தொடா்ந்து ஏற்பட்ட இந்திய-சீனா உறவில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய இரு நாடுகளும் கடந்த சில மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க