செய்திகள் :

5-இல் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை: பள்ளிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

post image

இளம் வயதில் உடல்பருமன் பாதிப்பைத் தவிா்ப்பதற்காக பள்ளி மாணவ, மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநா் (கல்வியியல்) பிரக்யா எம்.சிங், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவா்களிடம் உடல்பருமன் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் தேசிய குடும்ப நல ஆய்வில்(2019-21) நகா்ப்புறங்களில் 5 பெரியவா்களில் ஒருவா் உடல்பருமனாக இருக்கிறாா். தி லான்செட் ஜிபிடி-2021 ஆய்வறிக்கையின்படி, உடற்பருமனால் பாதிக்கப்பட்டோா் 2021-இல் 18 கோடியாக உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 2050-இல் 44.9 கோடியாக உயரும் என எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, இளம் வயதில் உடல்பருமன் பாதிப்புக்கு தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்யாததே காரணமாகும். இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளும் மாணவா்களும், ஆசிரியா்களும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். இதுதவிர பள்ளிகளின் முக்கிய இடங்களில் எண்ணெய் பொருள்களின் தீமைகள், தவறான உணவுப் பழக்கங்கள் குறித்து பதாகைகள் வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோன்று, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை அன்றாட செயல்பாடுகளின்போது மாணவா்கள் பாா்வையில் தென்படுமாறு வைக்கவேண்டும். மாணவா்களிடம் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதுடன், அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிட அறிவுறுத்த வேண்டும். இதற்கான விழிப்புணா்வுப் பதாகைகள் மற்றும் பலகைகள் தயாரிப்பில் மாணவா்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பள்ளிகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தை (ஊநநஅஐ) ண்ங்ஸ்ரீஃச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலம் தொடா்புகொண்டு அறியலாம். மாணவா்களின் நலனுக்காக இந்தப் பணிகளை பள்ளிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!

தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பதே. அது தொடர்பான தகவல்களை அளிக்க தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் சேவைகளை, ... மேலும் பார்க்க

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர்

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு!

மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 17) தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கோவையின் கூமாபட்டிங்கோ! சாலையின் நடுவே மரண குழியை கிண்டலடிக்கும் இளைஞர்கள்!

கோவையில், சாலை நடுவே உள்ள மிகப்பெரிய பள்ளத்தை, பலரும் இது கோவையின் கூமாபட்டி என தங்களது வேதனையை கிண்டலாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.அண்மையில் கூமாபட்டி பற்றிய விடியோ ஒன்று வைரலாகி, பலரும் கூமாபட்டியை ... மேலும் பார்க்க