செய்திகள் :

`500 ரூபாய்' - குழப்பத்தை ஏற்படுத்திய யூடியூப் வீடியோ; ``தவறான தகவலை பகிர வேண்டாம்'' - RBI

post image

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏற்கெனவே இருந்த ரூ.500, 1000 நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டது.

பணமதிப்பிழப்பு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தால் புதிதாக 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசு ஏற்கெனவே 2000 ரூபாய் நோட்டுக்களை கணிசமான அளவு திரும்ப பெற்றுக்கொண்டது. இதனால் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் பார்ப்பது அரிதாக உள்ளது.

பணமதிப்பிழப்பு அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டும் திரும்ப பெறப்படும் என்று புதிய ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. `கேபிட்டல் டிவி' என்ற யூடியூப் சேனலில் இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் வரும் மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக 500 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ மக்கள் மத்தியில் புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள விளக்கத்தில், "அதில் 500 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படமாட்டாது. மக்கள் தவறான தகவலை நம்பவேண்டாம். அரசு தகவல்களை பார்த்து உறுதி செய்து கொண்டு தகவல்களைபகிருங்கள். தவறான தகவலை பகிர வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.

Man Mom: மன அழுத்தம்; அணைப்பு... சீன இளம் பெண்களிடம் வைரலாகும் 'ஆண் அம்மா' - அப்படி என்றால் என்ன?

தற்போதைய உணவு கலாசாரம், நுகர்வு கலாசாரம், பொருளாதாரத் தேவைகள் என சமீப காலமாக மன அழுத்தத்துக்கான காரணங்கள் அதிகரித்திருக்கிறது. வேலை பளு, காதல் தோல்வி, குடும்ப சூழல் என இளைஞர்கள் இதனால் கடுமையாக பாதிக்... மேலும் பார்க்க

`வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை' - குற்றவாளிகளை பிடிக்க `சூனிய சடங்கு' செய்யப்பட்டதா?

கர்நாடகா மாநிலம் விஜயபுர மாவட்டம் பசவனபாகேவாடியில் செயல்படுகிறது கனரா வங்கி. இந்த வங்கியில் 58 கிலோகிராம் மதிப்புள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளி... மேலும் பார்க்க

சென்னை: 'பேசவே முடியாதவர் பாடும் அதிசயம்!' - விழிச்சவால் கொண்ட முதல் ஓதுவார் பிரியவதனா யார்?

சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் கோயிலில் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரியவதானாவுக்கு ஓதுவார் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைத் தொடர்ந்த அவர் கோயிலில் பாடும் க... மேலும் பார்க்க

Bengaluru: `எங்களுக்கு கன்னடர்களை பிடிக்கும்’ - ஆட்டோ ஓட்டுரை அடித்ததற்காக மன்னிப்பு கேட்ட பெண்

சாலையில் நடந்த வாக்குவாதத்தின்போது ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண், மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதை வீடியோ... மேலும் பார்க்க

Makeup: ஆள் அடையாளம் தெரியாமல் திணறிய ஃபேஸ் ஸ்கேனர்: கண்டித்த விமான நிலைய அதிகாரி; நடந்தது என்ன?

ஒரு காலத்தில் மேக்கப் தேவை இல்லை இயற்கை அழகே அழகு எனப் பேசப்பட்டது. ஆனால், கால ஓட்டத்தில் மேக்கப் என்பது என் தனி உரிமை. அதை நான் விரும்பும் வகையில் போட்டுக்கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது என உரிமைக் ... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ஜன்னல் வழியே ரூபாய் நோட்டு கட்டுகளை வீசிய அதிகாரி - என்ன நடந்தது?

ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் பைகுந்த நாத் சாரங்கி. இவர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டுவருவதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதனால... மேலும் பார்க்க